Saturday, October 13, 2012

சமயோசிதமும் தலைகாக்கும்.

பாண்டியநாட்டுப் புலவர் வடநாட்டுக்கு போனார். அங்குள்ள ராஜாவைப் பற்றி தமிழில் அழகாக கவிபாடினார். அதை அங்கிருந்த பல்மொழி அறிஞர், மன்னருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். மன்னருக்கு ரொம்பவே சந்தோஷம். நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார்.
""அடடா! டில்லிக்கு ராஜாவாய் இருந்தாலும், இந்த ஆசாமி வெறும் நூறைத் தானே கொடுத்தான்...சரி..சரி...எங்கு போனாலும் நம்மை வறுமை விடாமல் துரத்தும் போலும்!'' என நினைத்தவர், பல்மொழி அறிஞர் நிற்பதைக் கவனிக்காமல், ""உப்பும் காயும் வாங்கத்தான் போதும்'' என வாய் விட்டு சொன்னார். இதைக் கவனித்த பல்மொழி அறிஞர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.
""ராஜா..ராஜா! நீங்கள் கொடுத்த சன்மானத்தை இவன் துச்சமாக பேசிவிட்டான்,'' என்றார்.
ராஜாவுக்கு கடும் கோபம். புலவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து சமயோசிதமாக சமாளித்தார்.
""ராஜா அவர்களே! நான் சொன்னதை இந்த அறிஞர் தவறாகப் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். <உங்களைப் புகழ்ந்ததால் தான் நூறு ரூபாய் கிடைத்தது. மற்றவர்கள் கொடுத்திருந்தால் அஞ்சோ, பத்தோ உப்பும், காயும் வாங்கும் அளவுக்கு குறைவாகத் தான் கொடுத்திருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்,'' என்றார்.
ராஜாவுக்கு இது மொழி பெயர்க்கப்பட்டதும், அவர் அகம் மகிழ்ந்து, ""என் தர்ம குணத்தை இவ்வளவு உயர்த்தியா பேசினீர்,'' என்றதுடன், பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டார்.
சிலருக்கு பேச்சாலேயே ஆபத்தான சூழல் வந்து விடுகிறது. அப்படி வந்துவிட்டாலும், சமயோசிதமாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். சிலநேரங்களில் சமயோசிதமும் தலைகாக்கும்

No comments:

Post a Comment