Wednesday, October 30, 2013

பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது

...பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது
 
பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது என்பதைப்பற்றி பார்ப்போம். தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் பொறாமையாக வெளிப்படுகிறது. கீழ்கண்ட நான்கு விஷயத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வார்கள்.

1. அழகு

2. அறிவு...

3. புகழ்

4. பணம்

இதைத் தவிர வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் உண்மை என்ன என்றால் யாருமே தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தான். கடவுளின் படைப்பு அனைத்தும் உயர்வானவை தான். ஆனால் அதை அறிந்து கொள்ளாமல் தன்னைத்தானே தாழ்த்தி அழிவை தேடிக்கொள்கிறார்கள். பொறாமை மனம் கொண்டவர்கள் மனம் எப்போதும் துன்பத்திலேயே இருக்கும். இதுவே ஒரு பெரிய கொடுமையான விஷயம் ஆகும்.

ஆனால் தன்னை தாழ்வாக எண்ணாமல் உயர்வாக நினைக்க ஆரம்பித்துவிட்டாலே போதும் பொறாமை என்ற அரக்க குணம் வெளியேறிவிடும் என்பது தான் உண்மை

No comments:

Post a Comment