Thursday, October 31, 2013

கடவுளின் பெயர்களைச் சொல்லி வணங்க வேண்டும்

கிருஷ்ணர் "பன்றி' எனப்படும் வராக அவதாரமாக தோன்றினார். ஒரு அரக்கனால் மறைத்து வைக்கப்பட்ட பூமிப்பந்தை தன் மூக்கில் சுழலவிட்டு எடுத்து வந்தார். பூமியின் அதிபதியான பூமாதேவி இதற்காக நன்றி கூறினாள். ""சுவாமி! நீங்கள் இப்போது எனக்கு காட்சி தந்து காப்பாற்றியது போல, பூமியான என் மீது வசிக்கும் மனிதர்கள் கஷ்டப்படும் போதும் காட்சி தந்து காப்பாற்றுவீர்களா!'' என்றாள்.
அதற்கு பதிலளித்த வராகர், ""நிச்சயமாக! நல்ல மனம், உடம்பில் பலம் இதெல்லாம் இருக்கிற போதே, என் பெயர்களை பக்தியுடன் உரக்கச் சொல்லி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு காட்சி அளிப்பேன்,'' என்றார்.
உடம்பில் பலம் இருக்கும் வயது இளவயது தான். எனவே, குழந்தைகள், இன்றுமுதலே கடவுளின் பெயர்களைச் சொல்லி வணங்க வேண்டும். பெரியவர்களும் அவ்வாறு சொல்ல அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment