Wednesday, March 19, 2014

முதல் திறவுகோல்.

முதல் திறவுகோல்.
--------------------------
சிறந்த குரு அவர் என்பதை அறிந்து ,காண சென்றான் மன்னன். தனது மனதில் உள்ளதை வெளிப்டுத்தினான்
"அரசபோகங்கள் வெறுத்து விட்டது.., வாழ்வின் நிலையாமை புரிகிறது, ஆன்மவிழிப்புணர்வு மீதே நாட்டமாக இருக்கிறது..ஞானத்தை தேடி உங்களிடம் வந்தேன்..!" என்றா...ன் மன்னன்.

அப்போது குருவின் சீடன் ஒருவன் துடப்பத்தால்
அந்த இடத்தைப் பெருக்கி கொண்டு வர.., தூசுகள் மன்னனின் அழகிய உடையில் தூசின் தும்புகள் படிந்தன. கோபம் கொண்ட மன்னன் அந்த சீடனிடம் சீறினான்.
"கண் தெரியவில்லையா.. பாத்து பெருக்கு..!" என்றான்.

இதை கவனித்த குரு சொன்னார்.
"ஞானம் கிடக்கட்டும், முதலில் ஞானம் பெற உன்னை தகுதியாக்கி கொள்.. உன்னிடம் பாம்பு இருக்கிறது. முதலில் அதை கொண்று விட்டு வா..!" என்றார்.

புரியாது சிந்தித்து கொண்டே சென்றன் மன்னன். மீண்டும் ஒராண்டு கழித்து வந்தபோது. அந்நேரம் சீடன் வாளியில் கரைசலுடன் வந்து மன்னனுடன் மோதினான். இப்போது கோபிக்காது அமைதியுடன் "நன்றி..!" என்றான் மன்னன்.

இம்முறை குருவே ஒடிவந்து..,
"நீ இப்போது ஞானம் பெற முழுதகுதியும் உடையவன்.. ஆனால் உனக்கு சொல்லி க்கொடுக்க இனி என்னிடம் என்ன இருக்கிறது..!" என்றார் பெருமிதத்துடன்..!

(சகிப்பு தன்மையே ஞானத்தின் முதல் திறவுகோல். சகிப்புதன்மை இல்லாத இடத்தில் அகந்தையே இருக்கும். பயிரை வித்தைக்க வேணுமானால் நிலத்தை உழுது பண்படுத்த வேணுமல்லவா. ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல, அதை அதை அப்படியே ஏற்று கொள்வதுதான்.)















              • No comments:

                Post a Comment