Monday, March 10, 2014

நான் நேசிக்கும் ராமகிருஷ்ன பரம்மஹம்ஸர்.

நான் நேசிக்கும் ராமகிருஷ்ன பரம்மஹம்ஸர்.

ஒவ்வொரு இரவும் குருதேவர் யாருக்கும் தெரியாமல், எங்கோ சிறுது நேரம் சென்றுவிட்டு வருவது வழக்கம். இதை தினமும் கவனித்த வந்த சீடர்கள், குருதேவர் திடிரென்று பரவசநிலை அடைந்து எங்காவது விழுந்து விட்டால் என்னாவது என்று கவலைப்பட்டு அவரை பின் தொடர முட...ி வெடுத்தனர். வழக்கம் போல் அவரும் சென்றார். சீடர்களும் பின் தொடர்ந்தனர்.. அவர் தாழ்த்தப்பட்ட பறையர் இனத்தை சேர்ந்த பகுதிக்கு சென்றார். நேரம் நடுநிசியை நெருங்கியது. அவர் செய்யும் செயலை கண்ணுற்ற பௌர்னமி நிலவும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டன. அங்கே குருதேவர் தன் சடை முடிகளால், பறையர்கள் மலம் கழித்து சென்ற கழிவறை பகுதிகளை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதை கண்ணுற்ற சீடர்களின் மனவேதனையை சொல்லவும் வேண்டுமா உங்களுக்கு. ?!. மனவேதனையுடன் திரும்பினர் குருதேவரின் அறைக்கு. அவரது வருகைக்காக காத்திருந்தனர்.குருதேவரும் முக மலர்ச்சியுடன் தன் அறைக்கு வந்தார். அவர் வந்தவுடன் வானில் முழுமதியும் வெப்பத்தை தந்து கொண்டு யிருந்தது பூமிக்கு. சீடர்கள், அவரை வணங்கி வினவீனர் அச்செயலை ஏன் செய்கிறீர்கள் என்று. அதற்கு ஞானம் ததும்பும் இன்முகத்துடன் விடையளித்தார் குருதேவர். 'நான்' என்ற அஹங்காரம் செயலிலாலும், அனுபத்தினாலும், துறக்கமுடியுமே அன்றி.. அதனை பிராத்தனைனாலோ, நான் அஹங்காரத்தை துறந்துவிட்டேன் என்று கோடி முறை ஜெபிப்பதனாலோ, அஹங்காரத்தை துறக்க முடியாது. உயர் குலத்தோறும், தாழ்ந்த குலத்தோறும் நமக்கு ஒன்று என உணர்த்துவது இதுமாதிரியான சாதனாக்களே என்றார். ஆதிசங்கரர்க்கு புலத்தியராக முக்கண் சங்கரர்ரே வந்து "நான்" என்ற அஹங்காரத்தை துடைத் தெறிந்தார். இங்கு ஒப்பு நோக்க வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment