Monday, March 10, 2014

பெரிய அதிசயம்.

பெரிய அதிசயம்.
-----------------------
துறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒருவர் வந்தார். அவர் வழிபாடுகளை எல்லாம்... இழிவுபடுத்திப் பேசினார். "இது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்.., எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுளாக எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? வணங்க முடியும்..?" என்றார்.
துறவி அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை.
"நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால்.., எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்." என்றார் துறவி.
"அதென்ன?"
அமைதியாகச் சொன்னார் துறவி.
"யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மறந்து விடுவோம்...!"
மனதை கடந்த ஞானியரிடம் மன்னித்த சுவடுகள்கூட இருப்பதில்லை..!

No comments:

Post a Comment