Wednesday, June 25, 2014

தன்னைத் தானுணர்தல்

தன்னைத் தானுணர்தல்.
ஒ-நாமி என்ற மல்யுத்த வீரன் மிகவும் புகழ் பெற்று திகழ்ந்தான். அவன் குருவையும் வெல்லும் ஆற்றல் பெற்றவன். ஆனால் ஓர் போட்டியில் தோல்வியை தழுவினான்.
ஒரு ஜென் குருவிடம் சென்று சந்தித்து தனது பிரச்சனையை கூறினான். அவன் மீது கருணை கொண்ட குரு ஒ-நாமியைப் பார்த்து,
ஒ-நாமி என்றால் பேரலைகள் என்பது உனது பெயர், "இன்று இரவு முழுவதும் இந்த மடத்திலேயே தங்கி இரு, நீ ஒரு மல்யுத்த வீரன் என்பதை மறந்துவிடு, அந்த அதிவேகமாக கரையை முட்டும் அலைகளைப் போல, பேரலைகள் உருவாகி பெரும் சப்தத்துடன் அதி வேகமாக வரும் போது, எதிரில் உள்ள அனைத்தையும் தவிடு பொடியாக்கும், அந்த பேரலைகளை கவனி. நீயே அலைகள் என உணர். அலையாகி விடு.. என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
ஒ-நாமி தரையில் அமர்ந்து தானே அந்த அலைகளாக எண்ணி தியானம் செய்ய ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக அலைகளின் வேகமும் உயரமும் பெரிதாகிக் கொண்டே வருவதை உணர்ந்தான். அந்த அலைகள் மடத்தின் உள்ளே இருந்த பூந்தொட்டிகளை வேகமாக தள்ளி கீழே விழவைத்தன. கொஞ்ச நேரத்தில் புத்த விக்ரத்தையும் அந்த அலைகள் விட்டு வைக்க வில்லை. காலை ஆவதற்குள் அந்த மடம் அலைகளின் நுரைகளும், சப்தமும் கொண்டு முழுவதுமாக பேரலைகளில் சிக்கி முழ்கியது.
காலையில் வந்த குரு, ஒ-நாமி தியானம் செய்து கொண்டு இருப்பதை பார்த்தார். புன்னகையோடு மல்யுத்த வீரனின் தோலில் தட்டி "இனி எதுவும் உன்னை தடை செய்ய முடியாது, நீ அந்த அலையாகி விட்டாய், " என்றார். அவன் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.
அன்றே ஒரு மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வென்றான். அதன் பிறகு ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிய வில்லை.
உண்மை குரு எதையும் நமக்கு உபதேசிப்பது இல்லை. நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார். அவ்வளவுதான். தன்னைத் தானுணர்தல் ஞானம்.

No comments:

Post a Comment