Friday, June 20, 2014

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்.

கிருஷ்ண ஆட்டம்!---வேண்டுதல்களும் பலன்களும்.

கிருஷ்ண ஆட்டம்!

குருவாயூர் கோயிலில் தினமும் ராத்திரி பத்து மணிக்கு ‘கிருஷ்ணஆட்டம்’ களி என்று ஒரு கலை நடந்துவருகிறது. கதகளி, மோஹினியாட்டம் போல் இதுவும் பிரபலமான கதை நாட்டியம். 

இதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம்,
காளியமர்த்தனம்,
ராஸக்ரீடை,
கம்ஸவதம், 
ஸ்வயம்வரம் 
என்று எட்டுநாள் கதகளி ஆடி அவதரிப்பார்கள். பக்தர்கள் பணம் கட்டி நடத்தினால், அவர்களது வேண்டுதல்கள் நிச்சயமாகப் பலிக்கும். குருவாயூரில் இது பிரபலமான நேர்ச்சையாகும்.

ஸ்ரீகிருஷ்ணாவதாரம்:- சந்தான சௌபாக்கியம், பாலாரிஷ்டம் நிவாரணம், பாலபயம், பாலகேஷமம்

காளியமர்த்தனம்:- விஷபாதசமனம், சத்ருநாசம், ஸர்ப்பதோஷம் பரிகாரம், ரோகசமனம்

ராஸக்ரீடை:- கன்யகாகேஷமம், ஐஸ்வர்யம், ப்ரணயவிரஹம்.

கம்ஸவதம்:- சத்ருநாசம், பூர்விக சம்பத்து ஸ்தானம், கோர்ட்விவகாரம், கீர்த்தி தனலாபம்.

ஸ்வயம்வரம்:- மாங்கல்யபாக்கியம், கல்யாணத்தடை, தாம்பத்திய சௌக்கியம், வித்யாவிஜயம், அபவாத பரிகாரம்

பாணயுத்தம்:- கர்மவிஜயம், கார்யலாபம், சைவ-வைணவ ப்ரீதி, பிரேம ஸாபல்யம்

விவிதவதம்:- விவசாயம், நிலபுலன் மேம் பாடு, பீதிநாசம், செல்வம்

ஸ்வர்க்ககாரோஹணம்:- சந்தானதோஷ பரிகாரம், மரணபயம், ஆத்ம சுகம், மோட் சப்ராப்தி, விரஹதுக்கம், கஷ்ட நிவர்த்தி.

குருவாயூர் கோயிலில் இந்தக் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் ஒரு கதைக்கு ரூபாய் 2000/- ஆகும். குருவாயூரப்பனுக்கு இது ரொம்பப் பிடித்த கலையாகும். 

குருவாயூரப்பனைக் குழந்தையாகப் பல தடவை நேரில் பார்த்துப் பேசியவர் ஸ்ரீ வில்வ மங்கலம் ஸ்வாமி. அவரது அனுக்கிரஹத்தால் கிருஷ்ண பக்தனான கோழிக்கோடு ராஜாவான மானவேதனுக்கு ஒருநாள் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது. அப்போது ராஜா தன்னையே மறந்து பகவானை அப்படியே கட்டிப் பிடித்துக்கொள்ள, பகவான் திருமுடியிலிருந்து ஒரு மயில் பீலி உதிர்ந்து விழுந்தது. 

ராஜா அதையே மூலமாகக் கொண்டு தான் கிருஷ்ணன் பிறப்பிலிருந்து, சுவர்க்கம் சென்றதுவரை, எல்லா லீலைகளையும் ‘கிருஷ்ண கீதி’ என்று வடமொழிக் காவியமாக்கி ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சமர்ப்பித்தார். அதுதான் ‘கிருஷ்ண ஆட்டம் களி’ என்று பிரபலமானதாக ஐதிகம்.

குருவாயூரப்பன் இன்றும் கிருஷ்ணஆட்டம் பார்க்க வருகிறார் என்று சொல்கிறார்கள்.

 

No comments:

Post a Comment