Friday, September 5, 2014

குரு பூர்ணிமா

ஆனி மாதம் பௌர்ணமி அன்று வேத வியாசர் அவதரித்த தினம் வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்னும் பெயரில் கொண்டாடப் படுகிறது....
இது தான் உண்மையான குரு உத்ஸவமாகும்..
இந்த பாரத பூமி பிரம்மவித்யையை அறிந்து அதை கற்பித்த எண்ணற்ற மகரிஷிகளை தந்த புண்ணிய பூமி இது ..
குரு தக்ஷிணாமூர்த்தியிடமே தத்துவார்த்தங்களை உபதேசமாக பெற்ற அகஸ்தியர் முதலான மகரிஷிகளை தந்த புண்ணிய பூமி இது..
பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இந்த புண்ணிய பூமியில் அவதரித்து ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உயர்ந்த பிரம்ம வித்யையை உபதேசித்தார்..
கீதையை விட உயர்ந்த கல்வி வேறு எதுவும் இல்லை
ஸ்ரீமந் நாராயணனே வேத வியாசராக அவதரித்து
அனைத்து விக்ஞான ரகசியங்களையும் அடங்கிய வேதங்களை தொகுத்து அளித்தார்..
இறைவன் வேதங்களை கொண்டே படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களை செய்கிறான்..
இந்த புண்ணிய பூமியில் அவதரித்த லக்ஷ கணக்கான ஆத்ம ஞானிகளை ஆச்சாரியர்களை போற்றும் விதமாக வியாஸ பகவான் அவதரித்த தினத்தை குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம்

No comments:

Post a Comment