Thursday, January 1, 2015

''யக்ஞம்'

கர்மம் என்ற வார்த்தைக்கு ''யக்ஞம்'' என்று பொருள். யக்ஞம் என்றால், யாகம் வளர்த்து ,தேவர்களை வழிபட்டு பிரார்த்தனை செய்வது என்பது ஒரு பொருள். யக்ஞம் அல்லது யாகம் பல ஆண்டுகளாக இந்து தர்மத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.யாகம்,யக்ஞம் அக்னி ஹோத்ரம் முதலிய சடங்குகள் இப்பொது மேலை நாட்டவர்களினால்,குறிப்பாக ஜெர்மன் நாட்டவர்களினால் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் விளக்கங்கள் நமக்கு தரப்பட்டுள்ளன.'' Indian Express'' பத்திரிகையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த Reiner shaippiyar என்பவர் தமது ஆராய்ச்சிக்குப் பிறகு வெளியிட்ட கருத்துக்களை நாம் இங்கே தருகிறோம்.
''''அக்னி ஹோத்ரம் எனப்படும் அக்னி வழிபாடும்,யாகம் அல்லது ஹோமம் எனப்படும் யக்ஞமும் ஒரு தவம்.அது நம்மை நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன.. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தூய்மை கேட்டிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றது.மேலை நாட்டில் உள்ள கடும் குளிர் காலத்தில் பொதுவாக தாவரங்கள் செத்து விடும்.தொடர்ந்து செய்த ஹோமங்களினால் அவை பிழைத்துக்கொள்கின்றன.
யாக குண்டத்தில் இருந்து வரும் புகை தொழிற்சாலைப்புகையால் ஏற்படும் விஷத்தை முறித்து சூழ் நிலையை புனிதப்படுத்துகிறது. யாக குண்டத்தில் இருந்து எடுக்கபட்ட ரக்ஷையை அணியும் போதும்,மற்ற பிரசாதங்களை சாப்பிடும் போதும் ஆரோக்கியத்தை அவை தருகின்றன.'' இதுதான் அந்த ஜெர்மன் ஆராய்ச்சியின் முடிவின் கருப்பொருள்.
''யக்ஞ சிஷ்டாசின ஸந்தோ மூச்யந்தே ஸ்ர்வகில் பிக்ஷை'' என்கிறது பகவத் கீதை. யக்ஞத்தில் மிஞ்சியதை சாப்பிடுகிறவர்கள்,பாவத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது இதன் பொருள்.

No comments:

Post a Comment