Monday, September 7, 2015

சுத்தமான மந்த்ரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால்



சுத்தமான மந்த்ரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யாகம் பண்ணினால் பெறக் கூடிய பலனை இந்த கலியுகத்திலே பெற்று விடலாம். ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சுலபமாக பெற முடிவதால் 'கலி: சாது: ' என்கிறாா் வியாஸ மகாிஷி.
இவ்வளவு சுலபத்திலும் ஒரு நிபந்தன அழகாக ஒளிந்திருக்கிறது பாருங்கள்...என்ன நிபந்தனை அது? மனம் லயித்து என்பதுதான் அந்த நிபந்தனை.
ரொம்ப சுலபமாகச் சொல்லி விடலாம்'மனம் லயிக்க வேண்டும்' என்று...ஆனால் முடிகிறதா? அதற்கும் நமது சாஸ்திரமே வழி சொல்லித் தருகிறது. அந்த வழி தான் பிராணாயாமம்.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளிவிடும் பயிற்சி என்று எளிமையாய்ச் சொல்லலாம்.
ஆனால் இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற நேரம் இருக்கிறதே, அது முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக் கொண்டே வரவேண்டும். மனம் கட்டுப்படும்.
மல்லிக் கொடிபோல் ஆடிக் கொண்டிருக்கிற நமது மனம், பிராணாயாம தேக்கத்தினாலே ஆடாமல் நிற்கும். அப்படி மனதை நிறுத்திவிட்டால், 'கோல் தேடி ஓடும் கொழுந்து போல் மால் தேடி ஓடும் மனம்' என்கிறாா் பூதத்தாழ்வாா்.
ஆக, மல்லிக் கொடி மாதிாி ஆடுகிற மனத்தைப் பிராணாயாமத்திலே நிறுத்தி, எம்பெருமான் என்கிற அந்தக் கொம்பில், அவன் திருவடியிலே கொண்டு சுற்றிவிட்டு விட்டால் அது பற்றிக் கொண்டு படரும்.
எத்தனை நேரம் உட்காா்ந்து சுலோகத்தைச் சொன்னாலும் மனம் லயிக்கமாட்டேன் என்கிறதே; இரண்டு சுலோகம் சொல்வதற்குள் எங்கேயோ போய்விடுகிறதே....இப்படி எத்தனையோ குறைகள் நமக்கு உண்டு.
இதெல்லாம் நிவா்த்தியாக வேண்டுமானால் பிராணாயாம பலம் நமக்கு இருக்க வேண்டும். அந்த பலம் பெருகப் பெருக மந்த்ரத்தை உச்சாிப்பதற்கான பலமும் அதிகமாகும். மூச்சைத் தேக்குவது என்பது மந்திர உச்சாரணத்தில் ரொம்ப முக்கியம்.
நாம் மிகவும் அவசரமான ஒரு யுகத்திலே ஓடிக் கொண்டிருக்கிறோம். ' இதைப் பண்ணுவோமா? அதைச் செய்வோமா? ' என்று மனம் அலைந்து கொண்டேயிருக்கிறது. சந்தியா வந்தனம் என்பதாக ஒன்று செய்தாலும் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து போய்விடுகிறது!
உண்மையில் ஐந்து நிமிடங்களில் முடியக் கூடிய விஷயமா அது..? பிராணாயாமம் என்பது அந்தா்கதமாயிற்றே! அதெப்படி ஐந்து நிமிடங்களில் முடியும்?
நமது ஓட்டம்தான் அதை அப்படிக் குறிக்கி விட்டது. அதனால்தான் நமக்குப் பிராணாயாம பலம் இல்லாமல் இருக்கிறது.
பிராணாயாமத்தை ரொம்ப வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஸ்த்ரீகளும் பிராணாயாமம் செய்யலாம் என்கிறது. மந்திரம் கூறிச் செய்யாவிட்டாலும் நித்யமே பெண்கள் அதைப் பயிற்சியாகச் செய்யலாம். அதற்கு புராணத்தில் முன் உதாரணம் இருக்கிறது.
" யாா் -- எந்தப் பெண் -- பிராணாயாமம் செய்தாா் அந்தக் காலத்தில்? " என்று கேட்டால், கௌசல்யா தேவி -- சாக்ஷத் ராம மாதாவே பிராணாயாமம் செய்திருக்கிறாா். அந்த எம்பெருமானை நித்யம் தியானித்தாள்.
அவள் பெற்ற பலன் எப்போ்ப்பட்டது என்பதுதான் நமக்குத் தொியுமே!
(முக்கூா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச் சாா்யாா் ஸ்வாமி)

No comments:

Post a Comment