Thursday, August 6, 2026

 "எல்லா கோயிலிலும் மூலஸ்தானத்திற்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருக்கும்!ஏன்?"




கோவிலுக்கு வருபவன் கர்ப்பக்கிரஹத்தில் மூலஸ்தானத்தில் இருக்கிறான் என கருதி உள்ளே வந்து பூஜித்து அர்ச்சித்து தரிசித்து பிரசாதம் பெற்று திரும்பினால் நேர் எதிரே இருப்பது அந்த பெரிய நிலைக்கண்ணாடியே!
அதை பார்த்து அதிலும் சுவாமி உருவம் தெரிவதையும் காண்பான்?
பூசாரி தரும் விபூதியை சரியாக இட்டுக் கொள்ளவா?
கூட்ட நேரத்தில் அது விழியாக பார்க்கவா?
*அடேய், மடையா கடவுள் மூலஸ்தானத்தில் இல்லையடா!*
*உன்னுள் தான் இருக்கிறார்!*
அதை நீயே உன் கண் மூலமாக பார் என உணர்த்தவே!?
கண்ணாடியில் சுவாமியும் தெரியும் நம் உருவமும் தெரியுமல்லவா?
அதை நம் கண்ணால் தானே பார்க்கிறோம்!
கண்ணாடி வழியே தான் பார்க்க முடியும்?!
கண்ணை நாடி - கண்ணிலே ஆடிக் கொண்டிருக்கும் ஜோதியை நாடிப்பார் என்பதே!
அந்த ஜோதி தான் ஆதி!
நமது கண்ணும் கண்ணாடி போன்றதே!
நம் உருவத்தை எதிரில் நிற்பவர் கண்ணில் அதனுள் ஒளியில்வை!
காண்பாய் உன்னை நீயே!
நீயே ஆத்மா

No comments:

Post a Comment