Monday, October 20, 2014

கருணையின் மறுபெயர்தான் காமதேனு

அயோத்தியை ஆண்டு வந்த திலீபன் என்ற மன்னன், மகத நாட்டு இளவரசியை மணந்தான். பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மகப்பேறு இல்லாததால் மனவேதனை கொண்டனர். பல யாகங்களும் நடத்தி வந்தனர்.

திலீபனின் அரச குரு வசிஷ்டர், ஒருமுறை தம்பதியரை தனது ஆசிரமத்திற்கு அழைத்து உபசரித்தார். பின்னர் திலீபனுக்கும் இளவரசிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததற்கான காரணத்தைக் கூறினார். ‘திலீபா! நீ ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்தபோது, கற்பக விருட்சத்தின் கீழ் நின்றிருந்த காமதேனுவை அலட்சியம் செய்தாய்.

அதனால் இந்த நிலையை அடைந்திருக்கிறாய். காமதேனுவின் மனம் குளிரும்படி, நீ ஏதேனும் செய்தால் சாபம் நீங்கி உனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்’ என்று வசிஷ்டர் கூறினார். மேலும் அதற்கான உபாயத்தையும் கூறியருளினார்.

‘திலீபா! காமதேனுவுக்கு நந்தினி என்ற ஒரு கன்று இருக்கிறது. அது என் ஆசிரமத்தில்தான் இருக்கிறது. அது இப்போது நதிக்கரையில் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. நந்தினிக்கு தக்க உணவு உறைவிடம் தந்து, அதற்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாத்து வந்தால் தாய் பசுவாகிய காமதேனுவின் உள்ளம் குளிரும்.

உன் சாபமும் நீங்கும்’ என்றார். உடனே திலீபன் கற்றைத் தேடிப் புறப்பட்டுச் சென்றான். பாதுகாப்புக்காக வில்லையும், அம்பையும் உடன் எடுத்துச் சென்றான். நதிக்கரையோரம் புல் மேய்ந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும் திலீபன் ஆவலுடன் அதை நெருங்கினான். நந்தினியை தன் அரண்மனைக்கு அழைத்து வர அவன் மனப்பூர்வமாக விரும்பினான்.

ஆனால் அவனைக் கண்டதுமே கன்று ஓடத் தொடங்கியது. திலீபனும், நந்தினியை தொடர்ந்து சென்றான். கன்று நிற்பதும், புல்லைத் தின்பதும், ஓடுவதுமாகவே இருந்தது. திலீபனும் சளைக்காமல் நந்தினியை பின்பற்றி ஓடினான். கன்று இமயமலைச் சாரலை அடைந்து ஒரு மரத்தடியில் நின்று இளைப்பாறியது.

அப்போது அதைப் பிடித்துவிட கூடிய வாய்ப்பு இருந்ததை திலீபன் உணர்ந்தான். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு சிங்கம் வெளிப்பிட்டு கன்றின் மீது பாயத் தயாரானது. அதிர்ச்சி அடைந்த திலீபன், வில்லின் அம்பை பொருத்தி சிங்கத்தை வீழ்த்த முயன்றான்.

அந்த நேரத்தில் சிங்கம் தனது வடிவத்தை நீக்கி, ஒரு அசுரனாக மாறியது. திலீபன் அதிர்ந்து போனான். அசுரன் சிரித்த சிரிப்பு விண்ணை முட்டும் அளவு அதிர்ந்தது. அசுரன் பேசத் தொடங்கினான். ‘ஏய்! திலீபா! என்னை யார் என்று நினைத்தாய்? சிவபெருமானின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவன் நான்.

என் பெயர் கும்பாசூரன்’ என்று உரக்க கத்தினான். திலீபனும் சளைக்காமல், ‘உனக்கு இங்கு என்ன வேலை?’ என்றான். ‘இந்த மரம் பார்வதி தேவிக்கு பிரியமானது. இதன் மீது அவன் கந்தக் கடவுளைவிடவும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். இந்த மரத்தைப் பாதுகாப்பது என் வேலை.

இந்த மரத்தில் முதுகை தேய்த்து பட்டையை உதிர்க்கும் மிருகம் எதுவானாலும், அதை நான் உண்பது வழக்கம். மரத்தின் நிழலில் நிற்பது, படுப்பது, புல் மேய்வது எதையும் நான் அனுமதிப்பதில்லை. அதற்கான தண்டனை, அந்த மிருகம் எனக்கு இரையாவதுதான்.

இந்த கன்றும் எனக்கு இரையாகப் போகிறது’ என்று அசுரன் கர்ஜித்தான். ஆனால் திலீபனோ, ‘கன்றைக் காப்பது என் கடமை, அது வசிஷ்ட மகரிஷியின் ஆணையும் கூட. உன்னுடன் போரிட்டாவது கன்றை நான் மீட்பேன்’ என்று கூறினான். ‘என்னுடன் போரிடுவது என்பது இயலாதது.

நான் சர்வ சக்தி படைத்த இறைவனின் அனுக் கிரகம் பெற்றவன். நீ சாதாரண மனிதன். உன்னால் என்னை வெல்ல முடியாது’ என்று கும்பாசூரன் கூறினான். அதைக் கேட்டு மனம் சேர்ந்த திலீபன், ‘கன்றைக் காக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.

‘நீயே வலிய வந்து எனக்கு இரையாக வேண்டும்’ என்று அசுரன் தெரிவித்தான். கன்றுக்காக தன் உயிரை இழக்க முன் வந்தான் திலீபன். அப்போது வானில் மின்னல் ஒளி தோன்றியது. ஒளியின் ஊடே காமதேனு தோன்றியது. ‘திலீபனே! நான்தான் காமதேனு.

எவரது நெஞ்சம் உயிர்களுக்காக இரங்குகிறதோ, அவர் மீது என் அருட்பார்வை படுகிறது. உள்ளத்தில் சுரக்கம் கருணையின் மறுபெயர்தான் காமதேனு. கன்றை காப்பாற்றும் பொருட்டு உயிரை விடத் துணிந்த உன் கருணையை மெச்சினேன்.

உனக்கு சத்துவ குணம் நிறைந்த ஆண் மகன் பிறப்பான்’ என்று கூறிரையானது. இறைவன், மனிதர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளார். அவற்றை இறைவனை வழிபடுவதற்கும், உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.

பிறர் மனம் புண்படும்படியாக பேசுவதோ, செயல்புரிவதோ இறைவனுக்கு ஒவ்வாத செயலாகும். அது நம்மையே அழித்து விடக்கூடியதும் ஆகும். அந்த அழிவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமானால், தவறை உணர்ந்து நொந்து, உடலையும் உணர்வையும் வருத்தி நோன்பிருந்தால்தான் பயன்பெற முடியும்.

ராம சேவையின் மகிமை

ராவண வதமும், 14 ஆண்டு வனவாசமும் முடிந்து ராமர் அயோத்தி செல்லும் வேளை வந்து விட்டது. ராமர் பட்டாபிஷேகத்திற்கு அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள ராமர், லட்சுமணன் மற்றும் சீதையுடன், ஜாம்பவான், சுக்ரீவன், விபீஷணன், அனுமன், வானர வீரர்கள் என அனைவரும் புறப்பட்டனர்.

ஆனால் வானர வீரர்களில் ஒரு பகுதியினர் மட்டும் சோகமே உருவாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் காரணம் கேட்டான் ராமன். அதற்கு அவர்கள், 'பிரபு! எங்கள் படைத்தலைவர் வசந்தன். போரின்போது கும்பகர்ணன் அவரை கொன்று விட்டான்.

எங்கள் படைத் தலைவர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சி அடைவது' என்றனர். இதையடுத்து எமனிடம் சென்று, தான் கூறியதாக சொல்லி, வசந்தனை மீட்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிட்டார் ராமன். அதன்படியே எமலோகம் சென்ற அனுமனிடம், 'ராமனின் அடியவர்கள் நரகத்திற்கு வர மாட்டார்கள்.

அவர்கள் வானவர் உலகிலேயே இருப்பார்கள்' என்றான் எமதர்மன். அனுமன் இந்திரலோகம் சென்று இந்திரனிடம் ராமரின் கோரிக்கையை கூறினான். 'அனுமனே! ராமரின் அடியார்கள் இந்த உலகிற்கு வரமாட்டார்கள்.

அவர் பிரம்மன் உலகில் இருக்கலாம்' என்றான் இந்திரன். பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் வந்த விஷயத்தை கூறினார் அனுமன். அதற்கு பிரம்ம தேவர், 'ஆஞ்சநேயா! ராமனின் அடியார் எவ்வுலகிற்கும் செல்ல மாட்டார். அவர்கள் விஷ்ணுவின் பரமபதத்தில்தான் இருப்பார்கள்' என்றார். வைகுண்டம் சென்றார் ஆஞ்சநேயர்.

அங்கு வசந்தன் சூட்சும உருவில் பரம்பொருளான விஷ்ணுவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். பிரம்மாவின் மூலம் வசந்தனுக்கு உருகொடுக்கச் செய்து, பூலோகம் அழைத்து வந்தார் அனுமன். வசந்தனைப் பார்த்ததும் அவனது படைவீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமனிடம் ஆசிபெற்று அவரின் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டான் வசந்தன். 

Saturday, October 18, 2014

நவதுர்க்கைகள்


மகிஷாசுரனின் அக்கிரமங்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் ஸ்ரீ துர்க்காதேவி. அவளை நவதுர்க்கை என்று பக்தர்கள் போற்றி துதிக்கின்றனர். அந்த நவதுர்க்கைகள்:
1. சாந்தி துர்க்கை, 2. சபரி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சூலினி துர்க்கை, 6. வன துர்க்கை, 7. லவண துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. தீப துர்க்கை என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது இயல்பு பற்றிய விவரம் வருமாறு:-
1. சாந்தி துர்க்கை
தட்சன் தான் செய்த யாகத்தின் போது சர்வேஸ்வரனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இதனால் சிவன் சினம் கொண்டு எழுந்தார். அந்த சினத்தை சாந்தி செய்தவளும் நோய் நொடிகளை ஒழித்து அமைதி அளிப்பவள் சாந்தி துர்க்கை எனப்படுகிறாள்.
2. சபரி துர்க்கை
வில்லவன் அர்ச்சுணனுக்குப் பாசுபதம் வழங்க ஈஸ்வரமூர்த்தி வேடனாய் உருவெடுத்துச் சென்றார். அப்போது துர்க்கை வேட்டு வச்சியாக மாறி ஆசி வழங்கினாள். இதனால் அவள் சபரி துர்க்கை எனப்படுகிறாள்.
3. ஜாதவேதோ துர்க்கை
முருகப்பெருமான் ஜனனத்தின் போது ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்துத் தோன்றிய அக்கினிப் பொறிகளாக விழுந்தார். அந்த தீ பொறிகளை வாயு பகவானும், அக்கினி தேவனும் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அப்படி அவர்கள் செயல்பட அவர்களுக்கு மகாசக்தியினை அளித்தவள் என்பதால் ஜாதவேதோ துர்க்கையென போற்றி துதிக்கப்படுகிறாள்.
4. ஜ்வாலா துர்க்கை
பண்டாசுரன் என்னும் அரக்கணை ஒழிக்கப்போரிடும் போது, தனது படைகளைக் காக்க வேண்டியமையால் தானே தீப்பிழம்பு வடிவமாக தோன்றிமையினால் ஜ்வாலா துர்க்கை எனப்படுகிறாள்.
5. சூலினி துர்க்கை
திரிபுரத்தை எரிக்கச் சிவபெருமான் வெகுண்டெழுந்து சென்றார். அப்போது அவருடன் துர்க்கை சூலாயுதத்தை ஏந்திச் சென்றமையால் சூலினி துர்க்கை என்று போற்றுகின்றனர்.
6. வன துர்க்கை
நாம் செய்யும் பாவங்களை அழித்து ரட்சிப்பவளை வன துர்க்கை என கூறலாம். பவாரண்ய குடாரிகா என்ற லலிதா சகரஸ்ரநாமம் இதனை உணர்த்துகிறது. அஞ்சான வாசம் முடிந்ததும் பாண்டவர்கள் வன்னிமரப் பொந்திலிருந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அந்த மரத்தடியில் வைத்துப் பூஜித்தார்கள்.
வன துர்க்கையாகவும், எல்லாச் சங்கடங்களையும் அடக்கி ஒடுக்கி நன்மை தருபவளாகவும் விளங்கும் தேவியை ஒன்பது நாட்களும் வழிப்பட்டனர். தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.
விஜயம் தரும் தசமி என்பதாலும் அர்ச்சுணனாகிய விஜயனால் மிகவும் பயப்பக்தியுடன் பூஜிக்கப்பெற்றது என்பதாலும் இது விஜயதசமி என்று பெயர் பெற்றது. இதனை விஜய நவராத்திரி என்றும், வன்னிய நவ ராத்திரி என்றும் வன துர்க்கா நவராத்திரி என்றும் சொல்கிறார்கள்.
7. லவண துர்க்கை
ராமபிரான் வாழ்ந்த காலத்தில் லவணாசுரனின் அக்கிரமத்தை அழிப்பதற்கு சத்துருக்கனனுக்கு துர்க்கை அருள் புரிந்தாள். இந்த உதவியால் அவள் லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
8. ஆசுரி துர்க்கை
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும், அசுரர்களை மயங்கச் செய்து, அந்த அமிர்தத்தை தேவர்களைப் பருகிடச் செய்யும் ஆற்றலை திருமாலுக்கு துர்க்கை வழங்கினாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
9. தீப துர்க்கை
யோகியின் தவத்தை மெச்சி ஞான ஒளியைக் காட்டியமையால் தீப துர்க்கை என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஒன்பது நாமங்களில் அன்னை துர்க்கா தேவி பிரதிபலித்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பேரருள் தந்து காத்து ரட்சிக்கின்றாள்

Friday, October 17, 2014

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.......

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
, 38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று 
ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்.

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....


சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள இடைகாலத்தில் வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார்.

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச
னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
வாதம் நீக்குபவர்........
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்
மங்கு சனி, பொங்கு சனி
பரிகாரம் செய்வது எப்படி?
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும். 
ஏழரைச்சனி
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை. 
சனி பகவான் ஸ்தான பலன்கள்
சனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார். சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது பாராட்டைப் பெறுவார்.
மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால் சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம் புரிவார்.
சாஸ்திர சம்பிரதாயங்களை நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார். கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான் பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது. 
சனி என்பவர் யார்?
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.
அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.
இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். 
சனிபகவானின் பார்வை
சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில் அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஜதீகமாகும். ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப்போட்டு வைத்திருந்தான்.
அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார். உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது அவனை ராமர் மிக எளிதாக வென்றார்.
சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
சனி பகவானின் குணம்
ஓருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குறிய பரிகாரங்களை செய்து மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும்.
சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே உலகம்.
விரயச்சனி
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.
இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.
`ஜென்மச்சனி'
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி' இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு. 
சனி பகவான்
பெயர் - சனி பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்
வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்
உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்
பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர், 3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்
தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலமணி
சுவை - கசப்பு
சமித்து - வன்னி
உலோகம் - இரும்பு
பயன் - நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம் 
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை
ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.
குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.
இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.
இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்ல கதிக்கு யாது மோர் குறைவிலை 
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் 
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே. (ஞானசம்பந்தர்)
எல்லா உயிரினங்களும் ஆனந்தமாகவே வாழ விரும்புகின்றன. ஆனந்தம் பலவகைப்படும். சில ஜீவராசிகளுக்கு நேத்ரானந்தம். கண்ணால் பார்ப்பதிலே ஆனந்தம். சில ஜீவ ராசிகளுக்கு ச்ரோத்ரானந்தம். காதுகளால் கேட்பதில் (நல்ல சங்கீதம், சொற்பொழிவு) ஆனந்தம். சில ஜீவராசிகளுக்கு ஜிஹ்வானந்தம். நாக்கினால் நல்ல ருசியான உணவு உட்கொள்வதில் ஆனந்தம். அதேபோல் திருமணமும் ஆனந்தம்தான்.
ஓர் அறிவு படைத்தது முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை எல்லாரும் தேகசுக ஆனந்தத்தை விரும்பினாலும், அறிவு படைத்த மனிதன் அதனை வகைப்படுத்திக் கொண்டான். மூன்று வகையாக;
1. இப்படித்தான் வாழவேண்டும் (உத்தமம்)
2. இப்படியும் வாழலாம் (மத்யமம்)
3. எப்படியும் வாழலாம் (அதமம்)
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்க விரும்பிய மனிதன் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு நெறியை ஏற்படுத்திக் கொண்டான். இருமனமும் (ஆண் பெண்) ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு திருமணம், கல்யாணம் என்று கூறிக்கொண்டான். பெரியவர்கள் இந்த திருமணத்தை எட்டுவகையாக வகுத்தார்கள்.
1. பிராம்மம் 
ஸர்வாலங்கார பூஷிதையான கன்னிகையை பெரியவர்கள் ஆசியுடன் நல்ல வரனுக்கு விவாஹம் செய்துவைப்பது. இது பார்வதி, லக்ஷ்மி, மீனாக்ஷி கல்யாணத்திற்கு பொருத்தமாகும்.
2. தைவம் 
பையனின் திறமையைக் கருதி எல்லாரும் மகிழ்ந்திட கன்னிகாதானம் செய்து கொடுப்பது. இது முருகன்-தேவஸேனா, இராமர்-சீதை கல்யாணம் போன்றது.
3. ஆருஷம் 
ஒரே கோத்திரமில்லாமல் வெவ்வேறு கோத்திரம் உடையவர்களையும் மூன்று தலைமுறைகளை அறிந்து நடத்திவைப்பது. இதனையே கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு (எடு) என்ற பழமொழி வந்துள்ளன.
4. பிராஜாபத்யம் 
தர்மநெறி தவறாத நல்ல பண்புடைய பையன், நல்ல பண்புடைய பெண் நல்ல பிரஜையை வேண்டி செய்து கொள்ளும் திருமணம்.
5. ஆஸுரம்
அனேக திரவியங்கள் பொருள்கள் (பவுன், பணம், வரதக்ஷிணை) கொண்டும், கொடுத்தும், செய்யுள் திருமணம்.
6. காந்தர்வம் 
ஸ்திரீ புருஷர் ஒருவரை ஒருவர் விரும்பி தாமே திருமணம் செய்து கொண்டு பிறகு பெரியோருக்குத் தெரியப்படுத்துவது. இது க்ஷத்ரியர்களுக்குப் பொருந்தும்.
முருகன்-வள்ளி, துஷ்யந்தன்-சகுந்தலை, திருமணம் இதற்கு பொருந்தும்.
7. இராக்ஷஸம் 
பெண்ணிற்கோ பெற்றோருக்கோ விருப்பமில்லாத போது, பலாத்காரமாகத் தூக்கிச்சென்று திருமணம் செய்வது, ராக்ஷஸ விவாஹமாகும். இது ருக்மணி-கிருஷ்ணன், ஸம்யுக்தை-பிருதிவிராஜன் திருமணத்திற்குப் பொருந்தும்.
8. பைசாசம் 
பெண் தூங்கும் போது கழுத்தில் தாலி கட்டுவது. கற்பழித்து தாலிகட்டி மனைவியாக்கிக்கொள்வது, பைசாச விவாஹமாகும்.
இந்தத் திருமணங்களில் முதல் நான்கும், பிராம்மம், தைவம், ஆருஷம், பிரஜாபத்யம். இந்த நான்கும் உத்தமமானதென்றும், அடுத்து ஆஸுரம், காந்தர்வம் இரண்டும் மத்திமமென்றும், கடைசி ராக்ஷஸம், பைசாசம் இரண்டும் அதமமென்றும் கருதப்படுவதால், முதல் நான்கு திருமண முறைகளை நடத்திவைத்து மணமக்களான தம்பதிகளை எல்லா நலங்களுடனும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வர ஆசி வழங்குவோமாக!
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட 
மன்று ளாரடி யாரவர் வான்புகழ் 
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம். - சேக்கிழார்
1. பாணிக்ரஹணம் (கைப்பிடித்தல்)
மனிதன் வாழ்க்கைக்கு நல்ல ஒரு துணை வேண்டி ஒரு பெண்ணைத் துணைகொள்கிறான். “பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகையிருந்ததே” என்பார் திருஞானசம்பந்தர். நல்ல குணவதியாகவுள்ள ஒரு பெண்ணைத் துணைக்கொள்ள பெரியவர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணம் என்ற தமிழ்ச்சொல்லிற்கு வடமொழியில் “பாணிக்ரஹணம்” என்று கூறுவார்கள். பாணிக்ரஹணம் என்பது மணமகளின் வலக் கையை மணமகன் தன் வலக் கையால் பிடிப்பது என்றும், எப்படி பிடிக்க வேண்டும்? என்றும் தர்மசாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது. கையில் உள்ள ஐந்து விரல்களில் கட்டைவிரல் (அங்குஷ்டம்) ஆண்விரலாகவும், மற்றுமுள்ள நான்கு விரல்களும் தர்ஜநீ, மத்யமா, அநாமிகா, கனிஷ்டிகா என்று நான்கு விரல்களையும் பெண் விரலாகவும் கூறுகிறது. ஐந்து விரல்களையும் மணமகள் ஒருங்கே சேர்த்துப்பிடிக்க பாணிக்ரஹணம் ஆகும். ஒரு வீட்டில் அந்தக் குடும்பம் சிதம்பரமா? மதுரையா? என்று கேட்பது வழக்கத்தில் உள்ளது. சிதம்பரம் என்றால் ஆணாதிக்கம் என்றும், மதுரை என்றால் பெண் ஆதிக்கம் என்றும் பொருள் கூறுவார்கள். ஆனால் எப்படி இருக்கவேணுமென்றால் திருச்செங்கோடாக இருப்பது உத்தமம். ஆணும் பெண்ணும் சம உரிமையில் வாழ்ந்து வருவது மிகச் சிறப்புடையதாகும்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத் தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துனன்நம்பி மதுசூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்.
என்பாள் ஆண்டாள். மணமகளின் கையில் உள்ள ஐந்து விரல்களையும் ஒருங்கே சேர்த்து மணமகள் பிடிக்க பாணிக்ரஹணம் என்று ஆகும். அதனால் அவர்கள் கணவன் மனைவி ஆகிறார்கள். வைதீக திருமணத்தில் பாணிக்ரஹணந்தான் முக்கியம். மாங்கல்யம் அணிவிப்பது அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
***
2. மாங்கல்ய தாரணம் (தாலி கட்டுதல்)
கல்யாணம் என்பது பெண்களுக்குத்தான் சிறப்பைத் தரும். பார்வதி கல்யாணம், லக்ஷ்மி கல்யாணம், கௌரீகல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், ருக்மிணி கல்யாணம், என்று பெண்கள் பெயரில் இணைந்து விளங்கிவருவது கல்யாணமாகும். அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் மாங்கல்யம் (தாலி) அணிவதாகும். மாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில்தான் கோத்து அணிய வேண்டும் என்பதை, மாங்கல்யதாரண மந்திரம் “மாங்கல்யம் தந்துநானேநா” “தந்து-நூல்” என்று கூறுகிறது. அதன் பயனை “காமேசபத்தமாங்கல்யஸுத்ரசோபிதகந்தரா” என்று பிரும்மாண்ட புராணத்தில் உள்ள லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இதன் பொருள் காமேச - கடைசிவரை அன்பு அகலாத, பத்த - கட்டப்பட்ட, மாங்கல்யஸூத்ரசோபிதகந்தரா - மாங்கல்யக் கயிற்றினால் சோபிக்கின்ற கழுத்தை உடையவளாக ஸ்ரீ தேவியை வருணிக்கிறது. ஆகையால் நாமும் மஞ்சள் நூலில் கோத்த மாங்கல்யத்தை அணிவதால் அன்பு அகலாத மனைவியாயும் கணவனாயும், வாழ்ந்துவர வழிவகுக்கும். திருமணத்தில் மாங்கல்யம் அணியும் நேரத்தில் மணமகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை மந்திரமாவது;
(மங்களே மங்களா தாரே மாங்கல்யே மங்களப் ப்ரதே 
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா)
என்று கூறிப் பிரார்த்தனை செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்துவரச் செய்யும்.
***
3. க்ருஹப்ரவேசம் (மணமக்கள் வலக் காலை முதலில் வைத்து நுழைவது)
திருமணமான மணமக்கள் தம் வீட்டிற்குள் வாசற்படியைத் தாண்டி அடியெடுத்து வைக்கும்போது, பெரியவர்கள், “முதலில் வலக் காலை எடுத்து வைத்து வாருங்கள்” என்று கூறுவார்கள். தற்காலத்தில் இளைஞர்கள் ஏன் வலக் காலை முதலில் வைத்து வரவேணும்? இடக்காலை ஏன் முதலில் வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்கள்.
நமது சரீரத்தை இருகூறாக்கி, நடுவில் ஒரு நூலையிட்டால் இருபாகத்திலும் எல்லா உறுப்புகளும் இரண்டு இரண்டாக இருக்கும். வலப்பாகம் சற்று வன்மையாகவும் இடப்பாகம் சற்று மென்மையாகவுமிருக்கும். ஆயுர்வேத வைத்திய சாஸ்திரப் பிரகாரம் வலப் பாகம் சூரிய (கலை) அம்சமும் இடப் பாகம் சந்திர (கலை) அம்சமும் உள்ளது என்று கூறுகிறது. சூரியன் எந்நாளும் பிரகாசமாகவுள்ளது, சந்திரன் பதினைந்து தினம் வளர்ந்தும் பதினைந்து தினம் தேய்ந்தும் ஒருநாள் முழுமையாக இல்லாமலும் இருக்கும். முதன்முதலில் வாசற்படியைத் தாண்டி மணமக்கள் எடுத்துவைக்கும் முதல் அடியும் விசேஷமானது. அப்போது வலக் காலைத்தான் வைக்கவேண்டும். சூரியனுடைய அம்சமான வலப் பாதத்தை எடுத்து வைத்தால் என்றும் பிரகாசமாக இருக்கும். இதனையே சிவாகமம், “ஸவ்யபாதபுரஸ்ஸரம்அந்த: பிரவேச்ய” என்றும், “மணமகளே மருமகளே வா! வா! உன் வலக் காலை எடுத்து வைத்து வா! வா!” என்று தமிழ்ப்பாடலும் கூறுகிறது. மேலும். “வாழவைக்க வலக் காலும், அழிக்க இடக் காலும்” என்பது பழமொழியாகும். ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது முதலில் இடது காலை வைத்தார் என்றும், அதனால் இலங்கை அழிவைக் கண்டது என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. ஆகவே நாம் திருமணத்தில் மட்டுமல்லாது, எப்போதுமே வலக் காலையே வாசற்படியைத் தாண்டும் போது வைத்துப் பழகினால் என்றும் குறைவு இல்லாத நிறைவான வாழ்க்கையை அடையலாம்.
***
4. நாஸாபரணம் (மூக்குத்தி)
மனிதன் இப்புவியில் பிறக்கும்போது முற்பிறவியில் செய்துள்ள நல்வினை தீவினையின் பயனாகவே இப்பிறவி அமைகிறது. நல்வினை மிகுதியாகச் செய்தவர்கள் நல்ல ஸௌக்யமான வாழ்வையும், தீவினை மிகுதியாகச் செய்துள்ளவர்கள் துன்பம் மிகுந்த வாழ்வையும் அனுபவிக்கிறார்கள். பெற்றோர் தமக்குப் பிறந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என அறிந்துகொள்ள உதவுவது ஜாதகமாகும். அதுதான் சென்ற பிறவியின் பிராக்ரஸ் ரிப்போர்ட் ஆகும்.
வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் பெண்கள் நலமாக இருக்க, ஜோதிட நூல்கள் பெண்கள் எந்தெந்த நக்ஷத்திரத்தில் பிறந்தால் என்ன பயன்? என்று கூறுகிறது. தீதுறு நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவர்கள் வாழ்க்கை துன்பமயமாகவல்லவா இருக்கும்? இதனைச் சிந்தித்த பெரியவர்கள் பெண்கள் பிறந்த வீட்டில் எவ்வளவு நலமாக இருந்தாலும் புகுந்த வீடான தன் கணவன் வீட்டில் வாழ்நாள் பூராவும் நலமாக வாழ்ந்தால்தான் அவள் வாழ்க்கை சிறப்புறும், என்று தீதுறு நட்சத்திரங்களின் சக்தியைக் குறைக்க வழிகண்டார்கள். அதுதான் பெண்கள் மூக்குத்தியை அணியச் செய்தது. “தாரா-நக்ஷத்திரங்களின், காந்தி-சக்தியை, திரஸ்காரி-குறைக்க, மறைக்க, நாஸாபரண-மூக்குத்தி, பாஸுர-அணிய வேண்டும், என்று லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுகிறது. பெண்கள் ஆரோக்யமாக வாழ்ந்திட மூக்கு காதுகளில் துளையிட வேண்டுமென்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. துளையிட்ட இடத்தில் தங்கம், நவரத்னங்களை வைப்பதால், மாதந்தோறும் மற்றும் மகப்பேறு காலத்திலும் இழந்த சக்தியை ஈடுசெய்யும் என்று வைத்திய நூல் கூறுகிறது. ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணிவது மிக அவசியமாகிறது.
பாற்கடலைக் கடைந்தபோது அதில் கிடைத்த பொருள்களுடன் மஹாலட்சுமியும் அவளுக்கு முன் ஜேஷ்டா தேவியும் (மூதேவி) தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. முன்தோன்றியதால் ஜேஷ்டாதேவியை “அக்கா” என்றும் லக்ஷ்மியை “தங்கை”யென்றும் கூறுவர். மூதேவி சென்ற இடம் சீரழிந்தும் லக்ஷ்மி சென்ற இடம் சீரும் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்த மூதேவி, இறைவனிடம் “என்னை யாரும் விரும்புவதில்லை. என்னை மதிக்கக் கூடிய இடத்தில் இருக்க அருள வேண்டும்” எனக் கேட்டாள். வேண்ட முழுதும் தருபவனான இறைவன், “எந்த இடத்தில் இருக்க விரும்புகிறாய்?” என்று கேட்டபோது, மிக முக்யமாக எல்லாராலும் மதிக்கப்படக்கூடிய பசுவின் முகத்திலேயும், பெண்களின் மூக்கிலேயும், ஆண்களின் பிருஷ்டபாகத்திலேயும் (இடுப்பு) இருக்க வேண்டினாள். அப்படியே வரந்தந்துள்ளதை அறிந்த, அந்த மூவரும் இறைவனிடம் “வணக்கத்திற்கு உரியவர்களாக விளங்கி வரும் எங்களிடம் மூதேவி இருந்தால் யார் எங்களை மதித்து வணங்குவார்கள்?” என்று கேட்டதற்கு, இறைவன் “மூதேவி உங்களிடம் வராமல் இருப்பதறகு வழி சொல்கிறேன். ஆண்கள் ஆஸனமில்லாமல் செய்யும் எந்தக் காரியமும் மூதேவிக்கு உரியதாக ஆகும். ஆஸனத்தில் அமர்ந்து செய்யும் போது மூதேவி அங்கு வரமாட்டாள். பசுவிற்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பின்புறம் லக்ஷ்மி வாசம் செய்வதால் பின்புறம் பூஜை வழிபாடு செய்து, எந்த மிருகத்திற்கு இல்லாத அளவு உன்னுடைய சரீரமே எல்லா தெய்வங்களும் உறைகின்ற இடமாகவும், உன் சரீரத்தில் உண்டாகும் பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோஜலம் யாவும் இறைவழிபாட்டிற்கும் மனிதனுடைய ஆரோக்யத்திற்கும் உபயோகப்படும். பெண்களுக்கு மூக்கில் மூதேவி வாசம் இல்லாமல் இருப்பதற்கு லக்ஷ்மியின் அம்சமான நவரத்னங்களும் தங்கத்தாலான மூக்குத்தியும் அணிவதால் மூதேவி வரமாட்டாள். லக்ஷ்மி நித்யவாசம் செய்து வருவதுடன் சுமங்கலி பூஜை செய்து வழிபடுவார்கள் என்று ஆசி வழங்கினார். ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டியது அவசியமாகிறது.
***
5. தாடங்கம் (தோடு)
திருமணமான பெண்கள் மாங்கல்ய தாரணத்தின் போது கணவன் கூறிய மந்திரம். “மாங்கல்யம் தந்துநாநேன மமஜீவனஹேதுநா” - என்னுடைய ஜீவனுக்கு ஹேதுவாக இந்த மாங்கல்யத்தை அணிவிக்கிறேன் என்று கூறியதைக் கருத்தில் கொண்டு, தோடு முதலான ஆபரணங்களை தன் கணவனின் நலத்திற்காகவே அணிந்து வருகிறாள். தோடு அணிவதால் கணவனை எந்த ஆபத்திலிருந்தும் காத்திட முடியும் என்பதை வேதம் “சிவாருத்ரஸ்யபேஷஜீ தயாநோம்ருடஜீவஸே” என்கிறது. ஆலகால விஷத்தை உண்ட சிவன் ஜீவித்திருக்கிறார் என்றால், சிவா - தேவி, ருத்ரஸய - சிவ பெருமானுக்கு, பேஷஜீ - மருந்தாக இருக்கிறாள், தயாநோமிருடஜீவஸே - அதனால் சிவன் ஜீவித்திருக்கிறார், என்று யஜுர் வேதம் கூறுகிறது. “தாடங்கயுகளீபூத தபநோடுப மண்டலா” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். சூரியன் சந்திரன் ஆகிய இருவரை இரு காதுகளில் தாடங்கங்களாக (தோடுகளாக) அணிந்திருக்கிறாள்.
(ஸூர்ய சந்த்ரௌ ஸ்தநௌ தேவ்யா: தாவேவ நயதே ஸ்மிருதௌ
உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிக ஸ்ம்ருதி:)
சுமங்கலிகளுக்கு தாடங்கம் விசேஷமான ஆபரணம். அம்பாளுடைய தாடங்கத்தின் மகிமையைப் பற்றி ஆதிசங்கரர் தம் ஸௌந்தர்யலஹரியில் “அம்மா! உன் கணவன் ஆலகால விஷத்தைச் சாப்பிட்டாலும் அந்த விஷமானது நீ அணிந்திருக்கும் தாடங்கத்திற்குக் கீழ் இறங்காமல் கண்டத்தில் (தொண்டையில்) நின்றதற்கு தாடங்கத்தின் (தோட்டின்) மஹிமைதான்” என்கிறார். இதை
(ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராமிருத்யு ஹரிணீம் 
விபத்யந்தே விச்வே விதிசத-மகாத்யாதிவிசத:
கராளம் யத்க்ஷ்வேலம் கபலித வத: காலகலநா 
ந சம்போ: தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா)
என்று சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்.
அம்பாளின் அரும் பெரும் பக்தரான அபிராமிபட்டர் திருக்கடையூரில் அபிராமியையே தியானித்திருந்த நேரத்தில் தை அமாவாசை கடலாடிவிட்டு திருக்கடவூரில் அபிராமியை தரிசிக்க வந்த அரசன் பட்டரிடம் “இன்று என்ன திதி?” என்று கேட்க, அம்பாளின் சிந்தனையிலேயே இருந்த பட்டர் “பௌர்ணமி” என்று கூற, அரசன் “இன்று சந்திரதரிசனம் செய்யலாமா?” என்று கேட்க, “செய்யலாமே!” என்று கூற, அரசன் சென்றபிறகு, அங்குள்ளவர்கள் பட்டரிடம் “இப்பொழுது வந்து தங்களிடம் பேசியவர் அரசன். இன்றோ அமாவாசை. அதை பௌர்ணமி என்றும், தரிசிக்கலாமே யென்றும், கூறி விட்டீர்களே! இன்று ஆகாயத்தில் சந்திரன் வராவிட்டால் உங்கள் கழுத்திற்கு கத்தி வந்துவிடுமே! என்று எச்சரித்தார்கள். அம்பாளிடம் “ஏன்? என்னை இப்படி பேசவைத்து ஆபத்தை உருவாக்கிவிட்டாயே?” என்று மனம் கசிந்து அபிராமி அம்பாள் பேரில் அந்தாதி பாடினார். அந்தாதியென்பது முதல் பாட்டின் கடைசி அடியை அடுத்த பாட்டின் முதல் அடியாக அமைத்துப் பாடுவது. நூறு பாடல்களைக் கொண்டது அந்தாதி. எழுபத்தியெட்டாவது பாடலைப் பாடும்போது தேவி தன் இடக் காதில் அணிந்திருந்த தோட்டை (தாடங்கம்) ஆகாயத்தில் வீச வானத்தில் ஜகஜ்ஜோதியாக சந்திரன் தோன்றினான் என்பது வரலாறு. அந்தப் பாடல்,
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் 
அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக் 
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் 
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என்துணை விழிக்கே.
ஆகையால், பெண்கள் காதில் தோடு அணிவதால் தன் கணவனுக்கு எந்த ஆபத்தும் வராமல் காத்திட உதவுகிறது. அடியார்கள் குறைகளைக் கேட்டு அருள் பாலிப்பது “தோடுடைய செவி” என்று திருஞான சம்பந்தர் முதல் பாடலிலே கூறுகிறார்.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந்தண்டை கொலுசும் 
பச்சைவைடூர்ய மிச்சையா யிழைத்திட்ட பாதச்சிலம்பி னொளியும் 
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும் 
முழுதும் வைடூர்யம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும் 
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையிற் பொற்கங்கணம் 
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலாமொளியுற்ற சிறுகாது கொப்பினழகும் 
அத்திவரதன் தங்கை சக்திசிவரூபத்தை யடியனாற் சொல்லத் திறமோ!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியுமையே.
***
6. உச்சித் திலகம் (நெற்றிப்பொட்டு)
திருமணமான பெண், தலை உச்சி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். பெண்களுக்கு திருமணமாகிற வரை பிறந்த வீடும், பிறகு புகுந்த வீடுந்தான் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு புகுந்த வீடு நன்றாக அமைவதில்லை. காரணம் அவர்கள் தலைவிதியென்று கூறுவார்கள். தலைவிதி என கஷ்டப்படத்தான் வேணுமா? என்று சிந்தித்து அதற்கு ஒரு வழி கண்டார்கள். தலைவிதி என்பது பிரம்மா தலையில் எழுதிய எழுத்து என்று கூறுவார்கள். அதை நல்லதாக மாற்ற சரணாகதியே வழியென்றும், கண்டார்கள். சரணாகதியென்பது விழுந்து நமஸ்கரித்து வணங்குவதாகும். ஆண்கள் அஷ்டாங்கம் (எட்டு உறுப்புகள்) பூமியில் படும்படியாக வணங்கவேண்டும். பெண்கள் பஞ்சாங்கம் (ஐந்து உறுப்புகள்) பூமியில் படுமாறு வணங்கவேண்டும். உச்சந்தலை, இரண்டு கைகள் இரண்டு முழங்கால் பூமியில் படுமாறு வணங்கவேண்டும். பெண்கள் ஸ்தனங்கள் (மார்பு) பூமியில் படக்கூடாது. பெண்கள் தன் குறைகளை, தாயிடந்தான் கூறுவார்கள். எல்லாக் குறைகளையும் கஷ்டங்களையும் நிவர்த்திப்பவள் ஜகன்மாதாவான தேவியே. அவள் திருவடிகளில் -
(அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம 
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷரக்ஷ மஹேஸ்வரீ)
என்று கூறி அம்பாள் திருவடிகளை வணங்கினால் அவள் திருவடிகளில் பலர் அர்ச்சித்திருந்த குங்குமம் இவள் உச்சந்தலை வகிட்டில் ஒட்டிக்கொள்ளும். அதனால் அம்பாள் திருவடியும் குங்குமமும் தலையில் பட்டதால் தலையெழுத்து அழிந்துவிடும் என்பதை அருணகிரிநாதர் “கால்பட்டழிந்தது, இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே” என்பார். இதனை லலிதா ஸஹஸ்ரநாமம் “ச்ருதிசீமந்தஸிந்தூரீ கிருதபாதாப்ஜதூளிகா” என்கிறது. அம்பாளுடைய பாதாப்ஜ தூளியான குங்குமம் ச்ருதி - சீமந்த தலைவகிட்டில் இட்டுக் கொள்வதால் தலையெழுத்து நல்லதாக அமையும். இதனையே அரசனிடம் அமாவாசையை பௌர்ணமியென்று கூறிய அபிராமிபட்டர் தன் தலையெழுத்து அரச தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று எண்ணி, அபிராமியைக் குறித்து அந்தாதி பாட முதல் பாடலில் உச்சித்திலகம் தலையெழுத்தை மாற்றும் என்பார்களே! என் உள்ளத்தில் எப்போதும் உரைந்திருக்கும் தேவியே! “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்” என்று பாட அமாவாசை பௌர்ணமியாகி, காட்சி தந்து, அவர் தலையெழுத்து மாறியது போல திருமணமான பெண்கள் தலைவகிட்டில் குங்குமமிட்டுக் கொள்வதால் தலையெழுத்து நல்லதாக அமைந்து நல்ல கணவனுடனும் நல்ல குழந்தைகளுடனும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
***
7. மிஞ்சி (மெட்டி)
பெண்களுக்கு திருமணத்திற்கு முன் கிடைப்பவை மூன்று 1. மஞ்சள், 2. நெற்றியில் குங்குமம், 3. தலையில் புஷ்பம். திருமணத்திற்குப் பிறகு கிடைப்பவை மூன்று. 1. தலைவகிட்டில் உச்சித் திலகம் 2. கழுத்தில் கணவனால் அணியப்பெற்ற மாங்கல்யம் 3. கால் விரல்களில் அணியும் மிஞ்சி (மெட்டி, உருட்டு) ஆகும். மிஞ்சி திருமணத்தில் கணவன் மணமகளின் வலக் கால் கட்டை விரலைப் பிடித்து ஏழு அடி எடுத்து வைத்து (ஸப்தபதி) அம்மி மீது வைத்து மிஞ்சி (மெட்டி) அணிவிப்பது, வைதீக முறையில் நடத்தும் திருமணத்தில் முக்கிய கிரியையாக கருதப்படுகிறது. மிஞ்சி அணிவிப்பதன் கருத்து புத்ராத்சதகுணப்புத்ரி: ஆண்களை விட பெண்களுக்கு அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், ஆசை, காமம், உழைப்பு எல்லாமே அதிகமாக உள்ளது. அன்பு வளர்க்கும். ஆசை அழிக்கும். “ஆசையறாய் பாசம் விடாய்” என்கிறது சிவஞான சித்தியார்.
அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல் 
தவாஅது மேன்மேலும் வரும்.
ஆசையற்றார்க்குத் துன்பமில்லை, ஆசையுள்ளவர்க்கு மேன்மேலும் துன்பம் வரும், என்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
சீதா பிராட்டி தன் கணவனை அங்கு உலாவிய மானைப் பிடித்துத் தருமாறு மிகுந்த ஆசையுடன் விரும்பிக் கேட்டபோது, அது மாயமான் வேண்டாமென்று கூறியும், மிக வற்புறுத்திக் கேட்டதால் பல துன்பங்கள் அடைந்த வரலாற்றை இராமாயணம் கூறுகிறது.
திருமணமாகும் வரை மிக்க கட்டுப்பாடுடன் இருப்பது தமிழ்நாட்டுப் பண்பாகக் கருதப்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பிறகு ஆசை அளவு கடந்துவிடக்கூடாதே! என்று அதைக் கட்டுப்படுத்தத்தான், முன்பு பத்துவிரல்களிலும் மிஞ்சி (மெட்டி) அணியப்பட்டு, தற்காலம் சிலர் ஒரு விரலிலும் சிலர் இரண்டு விரல்களிலும் அணிந்து வருவதைக் காணமுடிகிறது. கால் விரல்களில் மிஞ்சி (மெட்டி)யை அணிவதால் மனத்தில் எழும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியுமா? என்ற ஐயம் ஏற்படும். தலையில் எண்ணெயை வைத்து தேய்த்து சற்று நேரம் கழித்து கால்விரல்களை ஜலத்தில் மேலே காட்டினால் எண்ணெய் விரலிலிருந்து வெளிவருவதைக் காணலாம்.
அதுபோல் ஆன்மிக அருளாளரிடம் ஆசிபெற வணங்க, அவர் திருவடிகளின் முன்பாக தலையை வைத்து வணங்கும்போது, அவர்களின் இரு திருவடிகளின் பத்து விரல்களிலிருந்து அவரின் அருளாசி கிடைக்கும் என்றும். அவர் இரு கைகளினால் ஆசி வழங்கும்போது அது பூர்ணமாகக் கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகிறது. அந்த ஆசியானது கை விரல்களில் தங்க மோதிரங்களுடனும், கால் விரல்களிலிருந்து மிஞ்சியுடனும் கலந்து வந்து நன்மை பயக்கும். இந்து மதத்தில் இடுப்பிற்குக் கீழே தங்கம் அணியக்கூடாது என்பதால் மிஞ்சி வெள்ளியால் அணியப்படுகிறது.
***
8. ரங்கோலி (வாசலில் கோலம் போடுவதன் தத்துவம்)
“பள்ளிக் கணக்கும் புள்ளிக் கோலமும் வாழ்க்கைக்கு உதவி செய்யும்” என்பது ஆன்றோர் வாக்கு.
பெண்கள் பள்ளியில் படித்தால் குடும்ப நிர்வாகம் செய்ய உதவியாக இருக்கும்.
வாசலில் புள்ளிவைத்துக் கோலம் போடுவதை தாய் தன் மகளுக்குக் கற்றுத் தருவது வாழ்க்கைக்கு உதவி செய்யும். தாய் ஐந்து புள்ளிகள் வைத்தும் ஒரு கோலத்தை நிறைவு செய்யவும், ஐம்பது புள்ளிகள் வைத்தும் கோலத்தை நிறைவு செய்யவும் கற்றுத் தருவாள். பெண் வாழ்க்கையில் தன் கணவன் வருவாய் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தாலும் மனமகிழ்வோடு குடும்பம் நடத்த உதவியாக இருக்கும் என்பதே இதன் கருத்தாகும்.
வீட்டு வாசலில் கோலம் சிறியதாகப் போட்டிருந்தால் உணவு வகைகள் சாதாரணமாகவும், கோலம் பெரிதாக இருந்தால் உணவு வகைகள் விசேஷமாக உள்ளன என்றும் அறிந்துகொள்ள உதவுவது கோலமேயாகும்.
***
9. ஜடை (தலைப் பின்னல் போடுவதன் தத்துவம்)
தலையில் உள்ள கூந்தலுக்கு “குழல்” “குழலி” என்று பெயர். “பூங்குழலி,” “வண்டமர் குழலி,” “கருந்தார் குழலி” என பெண்ணுக்கு சிறப்

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?
திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.
இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்
நம் முன்னோர்கள்.
இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

Thursday, October 16, 2014

ஆதிதைவீகம்.ஆதிபௌதிகம்.ஆதிஆன்மீகம்

1)ஆதிதைவீகம்
உயிர்உடலுடன் இணைக்கும் போது நம் வாழ்வில் நாம் செய்யும் நல்வினை தீவினை நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் தெய்வத்தால் இணைக்கப்படுவது ஆதிதைவீகம்
2)ஆதிபௌதிகம்
இயற்க்கையினால் அதாவது இந்த உலகம் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் இவற்றால் நாம் செய்யும் நல்வினை தீவினை நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் ஆதிபௌதிகம்
3)ஆதிஆன்மீகம்
நம் உடல் செயல்படுத்துவது உயிர் அவ்வுயிரினால் நாம் செய்யும் நல்வினை தீவினை மற்ற உயிர்களினால் நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் ஆதிஆன்மீகம்

ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும்.

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

தர்மம் என்பது என்ன?

தர்மம் என்பது என்ன?
------------------------------
நன்மைகள் வேண்டி செய்யப்படும் செயலகள் அனைத்தும் தர்மம் எனப்படும்.எதை செய்தால் நன்மை ஏற்படுமோ அதுவே தர்மமாகும்.”தரு”என்ற பதத்திலிருந்து பிறந்தது தர்மம் என்ற சொல்லாகும்.”த்ரு”என்றால் தாங்குதல் என்று பொருள்படும்.மனிதனை தன் நிலையிலிருந்து வீழாமல் மேல் நிலைக்கு உயர்த்துவாதாகும்.
பொதுவாகவே எல்லோரிடமும் ஒரு கருத்து உண்டு.ஒரு மனிதருக்கு எவ்வளவு தர்மம் செய்தாலும்,அவருக்கு ந்ன்றி இருப்பதில்லை,பெற்ற தர்மத்தை உணர்ந்து பார்ப்பதில்லை என சங்கடபடுவோரும் உண்டு.தர்மம் என்பதே எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதாகும்.
பூமியின் இயங்கியல் விதிப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு.சில நபர்களுக்கு சீக்கிரமாக எதிர் விளைவு கிடைக்கும்.பல நபர்கள் தாமதமாக உணருவார்கள்.பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் தராமல் நன்மையே செய்தால்,அவ்ரால் நமக்கு மீண்டும் நனமை கிடைக்கவேண்டியதில்லை.யார் மூலமோ,நாம் செய்த உதவி பல மடங்காக கிடைக்கும்.இப்படித்தான் தீமை செய்தாலும்.அதனால் தர்மத்தை செய்து,நனமையை பெறுவோம்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம்.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம்.
ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும். (அதாவது மகராசி 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை)
(ஒரு நட்சத்திரத்தின் தொராய நாழிகை 60 எனும்போது உத்திராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்)
உத்திராடம் முடியும் பாகை = 280.00 பாகை 
உத்திராடத்தின் நன்கில் ஒரு பங்கு = 3.20 பாகை 
திருஒணத்தின் 15ல் ஒரு பங்கு = 0.53.20 பாகை 
அபிஜித் நட்சத்திர மொத்த பாகை = 4.13.20 பாகை 
அபிஜித் நட்சத்திரம் = 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை.
(குறிப்பு : ஒருசில நூல்களில் உத்திராடம் 4ம் பாதமும் + திருஒணம் 1 ம் பாதமும் அபிஜித் என்றும்,
மேலும் ஒருசில நூல்களில் உத்திராடம் 3,4ம் பாதமும் + திருஒணம் 1,2 ம் பாதமும் அபிஜித் என்றும்,
இன்னும் ஒருசில நூல்களில் உத்திராடம் முடிவில் 5 நாழிகையும், திருஒணத்தின் ஆரம்பத்தில் உள்ள் 4 நாழிகை 4 வினாடியும் சேர்ந்த 9 நாழிகை 4 வினாடி அபிஜித் என்றும் சொல்லப்பட்டுள்ளது.)
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் :
1) அதிர்ஷ்டம் மிக்கவர்கள்.
2) அன்பும், கண்டிப்பும் மிக்கவர்.
3) தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள்.
4) தொழில் கெளரவம் மிக்கவர்கள்,
5) செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள்.
6) சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
7) தாய், தந்தை இருவருக்கும் பிடித்தபிள்ளை.
8) தாய், தந்தை இருவருவரும் குணமும் ஒருங்கே உள்ளர்.
9) தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர்.
10) கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு.
11) தொழிற்கல்வி சிறப்பு தரும்.
12) தர்ம குணம் உள்ளவர்கள்.
13) மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
14) தொடர் முயர்ச்சியாளர்.
15) அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர்.
16) திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு.
17) ஆய்வு மனபண்மை உள்ளவர்.
18) சுய தொழில் நன்மை தரும்.
19) உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும். 
அதிக நட்பு வட்டாரம் இருக்கும்.
20) ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
(இவை அனைத்தும் பொது பலங்கள்)
அபிஜித் முகூர்த்தம் :
நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to- 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to- 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to- 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும். இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும். 
நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமம் வந்தால் அதிக பலன் தரும்.
நாள் செய்வதை நல்லவனும் செய்யமாட்டன்.

ஒருவரின் ஆன்மிக பயணத்திற்கு உதவக் கூடியவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்

ஒருவரின் ஆன்மிக பயணத்திற்கு உதவக் கூடியவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம் -வழிகாட்டிகள், ஆசிரியர்கள் மற்றும் குரு.
(தமிழில் 'மற்றும்' என்ற வார்த்தையை 'and' என்ற வார்த்தையைப் போல சிலர் பயன்படுத்துகின்றனர், இங்கு அப்படி பயன்படுத்தப் படவில்லை)
வழிகாட்டி என்பவர் நம்முடன் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நமக்கு வழியை காட்டியபின் தன்வழி செல்வார். அவர் காட்டும் வழி சரியான வழியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான வழியை முடிவு செய்து செல்ல வேண்டியது பயணியின் பொறுப்பு.
ஆசிரியர் என்பவர், பயணத்தைப் பற்றி தன் அறிவால் அறிந்ததை நமக்கு அறிவுறுத்த முயல்பவர். அவர் அறிவுறுத்துவதை அவர் அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை, பயணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பறிவு, கேள்வியறிவால் அறிந்தவற்றை புரியும்படி எடுத்துச் சொல்ல தெரிந்தால் போதும். சரியானவற்றை மட்டுமே அறிவுறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. அவர் அறிந்ததை சரியாக அறிந்திருப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. இங்கு சரியானவற்றை சரியான முறையில் கற்றுக்கொள்வது கற்பவரின் பொறுப்பு.
குரு என்பவர் மற்ற இரண்டு விதமானவர்களை விட மிகவும் மாறுபட்டவர். தகுதியுடையவனைத் அடையாளம் கண்டு, தேடிச் சென்று அவனை சீடனாக ஏற்பார். சீடன் அறியவேண்டியவற்றை சரியான நேரத்தில், சரியான முறையில் அறிவுறுத்துவார். சீடனை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பார். தான் சென்றடைய முடியாவிட்டாலும், தன்னையிழந்தேனும், சீடன் சென்றடைய வழி செய்வார்.