Monday, February 20, 2012

ஒளி மயமான பாதை


முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்என்ற நம்பிக்கையில், இரவில் காட்டைக்கடக்க , ‘’ தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக வேண்டும் ‘’என்ற வரத்தினை கேட்டார் ஒருவர்.

அதாவது, முனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும் உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார்.
ஆனால் முனிவரோ, ஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார். ஏதோ, மாய மந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரே, இது பத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என்ற சந்தேக்த்தை முனிவரிடம் கேட்டே விட்டார்.
முனிவர், “அப்பனே, நான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும், ஆனால் அதனால் உனக்கு ஒன்றும் பயனில்லை. எப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும். இந்த விளக்கைப் பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல் சென்றடைவாய்என்றார்.
நம்மில் பலரும் இது போலத்தான். எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனை. நம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டு விட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம், கடவுளிடமும் சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம்.
நம் கண் முன் உள்ளதை, நம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாத, அறியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்து கனவு கண்டுகொண்டோ, கவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாது. இன்று நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்ய வேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து ,வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்

No comments:

Post a Comment