Saturday, March 17, 2012

பக்தி



ராமருக்கு சபரி கொடுத்த கனி, கிருஷ்ணருக்கு விதுரர் கொடுத்த கஞ்சி, குசேலர் கொடுத்த அவல் இவை எல்லாம் சாதாரண பொருட்கள் தான். ஆனால், அதை விருப்பத்தோடு ஏற்று இறைவன் உண்டு மகிழ்ந்தார். பலம் கொண்ட வானரப்படை சேதுக்கரையில் இலங்கைக்கு பாலம் கட்ட முயன்றபோது, அப்பணியில் சிறு அணிலும் சேர்ந்து கொண்டது. அன்பான அதன்
சிறுபணியையும் ராமன் ஏற்றார். இதையே கீதையில் கிருஷ்ணர், ""பக்தியோடு கொடுக்கும் சிறு இலை, பூ, கனி, நீர் எதுவானாலும் விருப்பத்தோடு ஏற்று மகிழ்கிறேன்,'' என்று குறிப்பிடுகிறார். நாம் கொள்ளும் பக்தி என்பது கைப்பிடி அளவு தான் என்றாலும், மலை போன்ற கடவுள் நம் வசப்படுவார். இதனை வள்ளலார் திருவருட்பாவில், "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment