Wednesday, September 5, 2012

ஆடித்தபசு

பரமசிவனிடம் ஒரு தடவை பார்வதி தேவி ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்கள் உடம்பில் பாதியை விஷ்ணுவுக்கு கொடுத்து காட்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட சிவன், பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் இருக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி பார்வதிதேவி ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதையடுத்து ஆடி மாதம் பவுர்ணமி தினத்தன்று உத்திராடம் நட்சத்திரத்தில் பார்வதி தேவிக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுத்தார். இது ஆடித்தபசு விழா என்றழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment