Thursday, November 29, 2012

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?

 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
.
ஆண்டுதோறும் பொங்கல் வருகிறது. வீட்டைச் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல, கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார் காஞ்சிப்பெரியவர். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டபந்தனமருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கிவிடும். எனவே, புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால் தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.


இக்கால குழந்தைகளிடம் பக்தியை எப்படி வளர்க்க வேண்டும்?
முதலில் பெற்றோர் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான உதவிகளான பூப்பறித்தல், விளக்கேற்றுதல், கோலமிடுதல் போன்றவற்றைச் செய்ய பழக்கவேண்டும். பக்திப்பாடல்கள், ஸ்தோத்திரங்கள் சொல்லும்போது அவர்களையும் நம்முடன் சேர்ந்து சொல்லச் செய்ய வேண்டும். சினிமா, சீரியல் குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெய்வீக விஷயங்கள், கதைகள்<, புராணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நம் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வபக்தி உள்ளவர்களாகவும் வளர்வதற்கான முறையில், முதலில் பெரியவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இதற்கு அவசியம்.

*

No comments:

Post a Comment