Thursday, November 29, 2012

ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் எள்தீபம் ஏற்றி வழிபடலாமா?

* ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் எள்தீபம் ஏற்றி வழிபடலாமா?
செய்வதானால் ஒன்றும் தவறில்லை. நமக்காக இல்லாவிட்டாலும் பொதுவாகக் குடும்பத்தாருக்காக தொடர்ந்து எள்தீபம் ஏற்றி வழிபடலாம்

தெய்வங்களுக்கு உகந்த மலர்கள் யாவை? எந்த தெய்வத்திற்கு எந்த மலர் சூட்ட வேண்டும்?
எருக்கு, செண்பகம், கொன்றை, நந்தியாவர்த்தம், மல்லிகை, காக்கரட்டை, அரளி, பவழமல்லி, மகிழம்பூ, செம்பருத்தி, தாமரை, அல்லி, மருதோன்றிப்பூ, வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மருள் ஆகியவை உகந்தவை. விநாயகருக்கு எருக்கு, அருகம்புல், முருகனுக்கு அரளி, மல்லிகை, சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி,பவழமல்லி, அம்மனுக்கு எருக்கு நீங்கலாக மற்ற பூக்கள் சிறப்பானவை. சிவனுக்கு செம்பருத்தி கூடாது.

சபரிமலை செல்லும்போது பம்பை நதிக்கரையில்திதி கொடுக்கலாமா?
புண்ணிய நதிக்கரையில் திதி கொடுப்பது விசேஷமானது. பம்பை நதிக்கரையில் தாராளமாகத் திதி கொடுக்கலாம்.

.

No comments:

Post a Comment