Saturday, March 1, 2014

முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி ....


முருகனைப் பாடும் சங்க இலக்கியங்கள் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலில் சில பாடல்களும் ஆகும். முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்.
“உலகை பிரகாசிக்கச் செய்வது ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள்வது ஒரு முகம்
உபதேசம் புரிவது ஒரு முகம்
வேள்விகளைக் காக்க ஒரு முகம்
தீயோரை அழிக்க ஒரு முகம்
வள்ளியுடன் குலவ ஒரு முகம்”
என்கிறார்.

திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமை நீங்கி முதன் முதலில் ‘கந்தர் கலிவெண்பா’ (குட்டிக் கந்தபுராணம்) பாடியவர் குமரகுருபர சுவாமிகள். ஆறுமுகங்களின் செயலை
சத்ரு ஸம்ஹாரத்திற்கு ஒரு முகம்
அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
ஞானம் அளிக்க ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
சத்ரு சம்ஹாரம் என்பது தந்தை. சிவனின் தொழில். முக்தி அளிப்பது மாமன் திருமாலின் பணி. தேவர் மூவரின் சக்தியும் இணைந்தவன் ஆனதால் முருகனே அப்பணிகளையும் புரிகிறான்.

திருப்புகழில் ஆறுமுகங்கள்
ஏறுமயிலேறி வினையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
-திருப்புகழ்

No comments:

Post a Comment