Monday, September 15, 2014

திருமண சமயத்தில் தர்ப்பணம் செய்யலாமா?

பிதுர் தர்ப்பணத்தை எந்த காரணத்திற்காகவும் செய்யாமல் இருப்பது கூடாது. இருந்தாலும், திருமணம் போன்ற சுபவிஷயங்கள் நடந்திருக்கும் குடும்பங்களில், குறிப்பிட்ட காலம் தர்ப்பணத்தில் எள்ளைச் சேர்த்துக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
""விவாஹே சோபநயனே சௌளே ஸதி யதா க்ரமம்
வர்ஷமர்த்தம் ததர்தம் ச நைத்யகே தில தர்ப்பணம்''
என்கிறது ஸ்லோகம். திருமணம் முடிந்து ஒரு வருட காலமும், உபநயனத்திற்கு ஆறு மாதமும் எள்ளினால் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக அட்சதையும், தர்ப்பைக்குப் பதிலாக அருகம்புல்லும் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment