Monday, July 13, 2015

அர்ச்சனையின் சிறப்பு

அர்ச்சனையின் சிறப்பு சுத்தமானவராக ஒருமித்த மனத்துடன் தனது வலது கையால் ஒவ்வொரு புஷ்பங்களாக எடுத்து தெய்வ விக்கிரகத்தில் பாதங்களில் சேர்ப்பதே அர்ச்சனை ஆகும் அதே சமயம் "மத்யமா அநாமிகா மத்யே புஷ்பம் ஸங்க்ருஹ்ய பூஜ்யதே" என்பதாக அர்ச்சனை செய்யும் போது கட்டைவிரல் மற்றும் சுண்டு விரல் படாமல் வலது கையின் நடுவிரலுக்கும் அநாமிகா என்னும் மோதிர விரலுக்கும் நடுவில் புஷ்பங்களை எடுத்து அர்ச்சனை செய்யவேண்டும் அத்துடன் நிர்மால்ய புஷ்பங்களை அகற்றும்போது "அங்குஷ்ட தர்ஜனீப்ஜாம் து நிர்மால்ய மபநோதயேத்" என்பதாக கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் மட்டுமே அகற்ற வேண்டும் இதை நாமும் சற்றே முயற்ச்சி செய்யலாமே

No comments:

Post a Comment