Wednesday, July 22, 2015

வேட்டைத் திருவிழா.

வேட்டைத் திருவிழா. இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துட்ட மிருகங்களை கொன்றொழித்து,மக்களை காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலைக் கொண்டிருப்பர். இதே போல், எம்மை துன்புறுத்தும் அறுபகைகள், மும்மலங்கள் முதலிய விலங்குகள் ,நோய்கள் அவற்றை வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத்திருவிழாவை மேற் கொள்ளுவதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலே அல்லது இதற்கென தயார் செய்த வேட்டைக்கான இடத்திலோ மிருகங்களின் உருவங்களை வைத்து அங்கு அஸ்த்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காயை பலியிடுவது வழக்கம். வேட்டையிலிந்து திரும்பியதும் பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்படும்.
- ''பக்திமலர்''

No comments:

Post a Comment