Saturday, November 7, 2015

தாய் தந்தையரின் பெருமை

தாய் தந்தையரின் பெருமை

ஒரு ஆசார்யன் பத்து உபாத்யாயர்களை விட உன்னதமானவன். நூறு ஆசார்யர்களை விட தந்தை உன்னதமானவர் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. தாயிற்கு இதை விட உன்னத ஸ்தானம். தாய் 1000 தந்தையரை விட உன்னதமானவள். யாக்ஞவால்கி மஹரிஷி காலத்தில் உபநயனம், தந்தையோ அல்லது சகோதரனோ செய்வர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் மற்றவர். இல்லை என்று சொன்னால் தந்தை, சகோதரர்  மரணம் அடைந்தார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இவர்களுக்கு தகுந்த யோக்யதை இல்லையென்றால் உபநயனம் மற்றவர்கள் செய்து வைப்பர். தந்தை, சகோதர வேத்த்தில் ஒரு ஸாகையாவது அத்யயனம் செய்திருக்க வேண்டும். அத்யாபனம் செய்திருக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் செய்யக்கூடாதி விருத்தியில் (வேலை) இருக்கக்கூடாது. இந்த பிரமானத்தை வைத்து பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் எந்த தந்தையும் தன் மகனுக்கு உபநயனம் செய்யும் தகுதி இல்லை. சில ஸ்ம்ருதிகளில் பெரியவர்களுக்கும், பூஜைக்குரியவர்களும் குரு ஸ்தானத்தில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தந்தை, பாட்டனார், சகோதரர், தாய்-தந்தையினுடைய சகோதரர்கள், சகோதரியின் மாமனார், அரசர், படித்தவர்கள், நன்னடத்தையுடன் இருப்பவர்கள் ஆகிய ப்ராஹ்மணர்கள் – தாய், ஆசாரியரின் பத்னீ, அத்தைகள், சித்திமார்கள், மூத்த சகோதரர்கள் – எல்லோரும் குருமார்களே. இவ்வளவு குருமார்களும் இருந்தாலும் ஆசாரியனுக்கு விசேஷமான இடம் உண்டு. வித்யா தானம் செய்வதால் அவருக்கு பித்ரு ஸ்தானம். அவருக்கு மரியாதை அதிகம். குருவிற்கு சம்மந்தமுடையதே கௌரவம்.
தர்ம சாஸ்திரம், ஆதம் வித்யை சொல்பவர் அல்ல குரு. எந்த வித்தையை சொல்லிக் கொடுத்தாலும் அவர் குருவே என்று மனு கூறுகிறார். ஸத்வித்தையை போதிக்கும் குருவின் மகத்துவத்தை எப்படி கூறுவது என்று அவர் ஆச்சரியத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment