Saturday, November 7, 2015

குரு

சாத்திரங்களின் அர்த்தங்களை போதிப்பவர்- போதக குரு.
மெய்ப் பொருளின் தன்மையை உணர்ந்தவர் (தத்துவ தரிசனம் பெற்றவர்) - வேதக குரு.
தொழில் முன்னேற்றம் குடும்பமேனமை காரயசித்தி போன்றவை மூலம் இல்வாழ்க்கையை மேம்படுத்துபவர் - நிகித குரு
இவ்வுலக இன்பத்தை நாடினாலும், பரம்பொருள் அன்பமான பேரின்பத்தை நாடினாலும்
நாம் விரும்பிய இன்பத்தை நமக்கு தருபவர்- காமிய குரு.
சன்மார்க்க நெறியில் அறிவைத்தூண்டி தியானம் கைகூடச் அருள் செய்பவர் - சூசக குரு.
உலக வாழ்வில் வெறுப்பும், ஆன்மீக வாழ்வில் அளவற்ற விருப்பமும் உண்டாக்கி வைப்பவர்- வாசக குரு.
சிவ - ஜீவ ஐக்கியத்தை ஏற்படுத்துபவர் எவரோ அவரே- காரக குரு.
ஐயம் எல்லாம் நீக்கி, அறிவைத் தெளிவாக்கி ஆன்ம விடுதலையுடன்வாழச் செய்பவர் - விகித குரு.
மேற்கூறிய எண்வகை குருமார்களின் தன்மையையும் ஒருங்கே கொண்டவர்- சற்குரு.

No comments:

Post a Comment