Sunday, May 29, 2011

சுருக்கமாக எழுதுவோமே!

சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களுக்கு பெருமை அதிகம். சமஸ்கிருதத்தில் சுருக்கமாக அமைந்த நூல் பிரம சூத்திரம். தமிழில் திருக்குறள், சிவஞான போதம். ஐம்பது வார்த்தைகளைச் சொல்லி விளக்குவதைக் காட்டிலும், ஐந்தே வார்த்தைகளால் விளக்குபவனே அறிஞன் என்பதன் அடிப்படையில் இந்த நூல்கள் எழுதப்பட்டன. இவற்றின் பெருமை பற்றி வாரியாரிடம் கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா? ""இரண்டு முத்துமாலைகள்... ஒவ்வொன்றிலும் ஆயிரம் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன. முத்துக்கள் அசைந்தால் ஒளிவிடும், அழகாக இருக்கும் என்று கருதி, ஒருவன் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தான். இன்னொருவன் முத்துக்களின் ஊடேயுள்ள நூலைப் பிடித்து அசைத்தான். எல்லா முத்துக்களும் அசைந்து ஒளியைச் சிந்தின. இந்த இருவரில் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தவனை விட, கயிறைப் பிடித்து அசைத்தவனே புத்திசாலி. இதுபோல, சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களே உயர்ந்தவை,'' என்றார்

No comments:

Post a Comment