Wednesday, May 18, 2011

ராமநாமம்

ராமநாமம்



அண்டர் குலத்திற்கு அதிபதி ஸ்ரீராமன்

தன்னை போன்ற சக மனிதர்களையே கொன்று தின்ற

அசுரர்களை அழித்தவன் ஸ்ரீராமன்

அகந்தை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்தவன் ஸ்ரீராமன்

நம் மனதில் குடிகொண்டு நம்மை ஞானத்தை

அடையவிடாமல் செய்யும்அகந்தையை

அழிக்க வேண்டுமென்றால் நாம் ராம நாமத்தை

ஜபம் செய்ய வேண்டும்

நாமம் ஜெபிக்க மிக எளிது

காலம் நேரம் எதுவும் தேவையில்லை

ஆசாரங்கள் எதுவும் தேவையில்லை

அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் போதும்

ராம நாமம்தான் நமக்கு பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கவல்லது

மற்ற மந்திரங்கள் எல்லாம் நமக்கு காம்ய பலன்களைதான் தரும்

ராம நாமம் நம்மை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்து நிச்சயமாக காக்கும்

நமக்கு மனசாந்தி அளிக்கும்

நம்மை எப்போதும் கவசம்போல் இருந்து ராமநாமம்

சொல்பவரை காக்கும் என்பதை அந்த மந்திரத்தை

சொல்பவர்கள் அனுபவத்தில் உணரலாம்

எல்லோரும் கைவிட்டாலும் ராம நாமம் நம்மை

என்னிலையிலும் கைவிடாது

இது சத்தியம் சத்தியம் .

நம்முடைய ஆன்மாவில் ஸ்ரீராமன் கொலு வீற்றிருக்கின்றான்.

அவன் நாமத்தை விடாது சொல்பவர்கள் இதயத்தில்

அவனை சத்தியமாக தரிசிக்க முடியும்.

ஸ்ரீராமனின் உருவம் உங்களுக்காக ஓவியமாக

ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

No comments:

Post a Comment