5 வகை நந்திகள்:
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருப்பார்கள். இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால்விடை நந்தி, தரும நந்தி ஆகியவை தான் அவை. இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைப்பார்கள். ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது பிரகாரத்தில் அமைகிறது. தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்.
`வெண்ணை பிரான்':
தஞ்சை மாவட்டம் சிக்கலில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் வெண்ணெய் பிரான் என்பதாகும். வெண்மதி சூடி, வெண் பொடி பூசி, வெள்ளை மலையில் உறையும் இந்த வெண்ணிறப் பெருமான், அடியார்கள் பணிந்து வேண்டினால் வெண்ணெயாக உருகி அருள்புரிவார் என்கிறார்கள்.
பயம் இல்லாதவர்:
சிவபெருமானின் ஆயிரம் நாமங்களில் ஒன்று `ஓம் விபீஷணாய நம' என்பதாகும் `விபீஷணன்' என்றால் `பயம் இல்லாதவன்' என்று பொருள். நமக்கெல்லாம் கடைசி பயம் மரண பயம். சிவபெருமான் காலனை வென்றவர், காலனை உதைத்தவர், காமனை எரித்தவர், பயம் இல்லாதவர். அதனால் அவருக்கு விபீஷணன் என்றும் பெயர் உண்டு.
சிவலிங்க தத்துவம்:
சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது. இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம்.
தேர் திருவிழா:
எல்லா சிவன் கோவில்களிலும் தேர்த் திருவிழாவில் சோமாஸ்கந்த மூர்த்திதான் உலா வருவார். விதிவிலக்காக சிதம்பரம் கோவிலில் நடராஜரும், ஆலங்குடி கோவிலில் தட்சிணாமூர்த்தியும் உலா வருகிறார்கள்.
No comments:
Post a Comment