Saturday, February 2, 2013

தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

அன்னதானம்: வறுமையும், கடன்களும் நீங்கும்.
பூமிதானம்: பிரம்ம லோகத்தையும் ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும். கோதானம்: ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். வஸ்திரதானம்: ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்: கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம்: புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்: பாவங்களை போக்கும்.
தயிர் தானம்: இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்: நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்: ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்: துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்: பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்: குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும்.
வெள்ளி தானம்: மனக்கவலை நீங்கும்.
பழங்கள் தானம்: புத்தியும் சித்தியும் தரும்.

No comments:

Post a Comment