Thursday, August 22, 2013

உண்மையான பக்தி என்றால் என்ன?

நாயன்மார் அறுபத்துமூவரின் வரலாற்றையும் படித்துப்பாருங்கள். இவர்கள் அனைவருமே உண்மையான பக்தர்கள் தான். கண்ணப்பர் கண்ணைக் கொடுத்து அருள் பெற்றார். சாக்கியர் இறைவனைக் கல்லால் அடித்தாலும் சிவபதம் அடைந்தார். கொடுத்தாலும், அடித்தாலும் அவனருள் கிடைக்கிறது. அதனால், இது தான் பக்தி என்று வரையறை எதுவுமில்லை. பக்தியைப் பொறுத்தவரையில் நோக்கமே முக்கியம். பசுவைக் கொன்று தின்பவர் என்றாலும் ஈசருக்கு அன்பரானால் அருள் கிடைக்கும் என்கிறார் நாவுக்கரசர். அன்பு நெஞ்சத்தையே இறைவன் விரும்புகிறான்.

No comments:

Post a Comment