Tuesday, August 27, 2013

மருதாணி வைப்பது ஏன்?

பண்டிகை, சுபநிகழ்ச்சி காலங்களில் பெண்கள் மருதாணி பூசி அழகுபடுத்துவர். இப்போது  மெகந்தி என்ற பெயரில் இது அவதாரமெடுத்துள்ளது.  என்ன தான் நவீனம் வந்தாலும், ஒரிஜினல்  மருதாணியின் மகத்துவமே தனி தான். இதைப் பூசினால் உடல்சூடு தணியும். தோல், நகக்கண்களில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்குண்டு. மருதாணி இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி,  தலையில் தேய்த்துக் குளித்தால்  முடி உதிர்தல் தவிர்க்கப்படும். தலையில் அரிப்பு, பொடுகு வருவது தவிர்க்கப்படும். மருதாணி பூசுவது மங்கலத்துக்காகவும், அலங்காரத்துக்காகவும் மட்டுமல்ல!  சில நோய்களை தடுக்கவும் தான்! புரிந்து விட்டதா அறிவியல்  காரணங்கள்!

No comments:

Post a Comment