Thursday, August 22, 2013

நல்லவன் வாழ்வான்

உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம் என்று திருமந்திரம் கூறுகிறது. இந்த உண்மையை வேதங்களின் மூலமாக அறிய முடிகிறது. நம் பேச்சே அக்னி. வாயுவே மூச்சாக வெளிப்படுகிறது. வருணதேவன் உடலில் நீராக இருக்கிறார். எமதர்மன் குதத்திற்கு தேவதையாக உள்ளார். சந்திரன் மனோகாரகனாக இருந்து மனதை இயக்குகிறார். சூரியன் ஆத்மாவிற்கும், கண்ணிற்கும் அதிபதி. செவியில் ஆகாயத்தத்துவம் இருக்கிறது. புலன்களுக்கு (உறுப்புகள்) அதிபதி தேவேந்திரன். நன்மைக்காக இந்த கருவிகள் பயன்பட்டால் தேவர்களின் பக்கம் நாம் இருக்கிறோம். தீயவிஷயங்களில் ஈடுபட்டால் அசுரசக்திகளுக்கு நாம் அடிமை என்பது அர்த்தம். இனி நல்லவர் பக்கம் நம் மனதைச் செலுத்துவோம்.

No comments:

Post a Comment