Monday, August 26, 2013

இந்த உலகில் படைப்புத் தொழிலை செய்ய பிரம்மாவை விஷ்ணு தோற்றுவித்தார். அதோடு வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். இதனால் பிரம்மாவுக்கு கர்வம் தோன்றியது. இதை அறிந்த விஷ்ணு பகவான், பிரம்மாவுக்கு பாடம் புகட்ட மது, கைடபர் என்ற 2 அரக்கர்களைத் தோற்றுவித்தார்.

அந்த இரு அரக்கர்களும் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை பறித்து சென்று விட்டனர். இதனால் பிரம்மா படைப்பு தொழிலை செய்ய முடியாமல் திணறினார். பிறகு கர்வத்தை உதறி விட்டு விஷ்ணுவிடம் சரண் அடைந்தார்.

உடனே விஷ்ணு குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் உருவம் எடுத்து அரக்கர்களிடம் இருந்த வேதத்தை பறித்து வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அப்படி அவர் வேதத்தை ஒப்படைத்த தினம் ஆவணி பவுர்ணமி தினமாகும். எனவே நாளை ஹயக்ரீவரை வணங்கினால் கல்வி மற்றும் வேதங்களில் மேன்மை பெறலாம்.

No comments:

Post a Comment