Tuesday, July 29, 2014

உருவ வழிபாடு பற்றி .......

உருவ வழிபாடு பற்றி .......
உருவ வழிபாடு பற்றி எத்தனை பதிவுகள் போட்டாலும். இந்த கிறிஸ்துவ, முஸ்லிம் மற்றும் ப(கு)ழுத்தஅறிவு மண்டைகளுக்கு அது ஏறாது. சரி நாங்கள்தான் உருவத்தை வழிபடுகிறோம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அவ்வளவுதான் அதற்கு அவர்கள் தரும் பதில் நம்மை வியக்கும் அளவுக்கு பைபிள் மற்றும் குரான் வசனங்களை போட்டு தள்ளுவார்கள். ஏன்டா சிவனை செய்யிற அதே கல்லுதான் ஏசுவை மற்ற தெய்வங்களையும் செய்யிது அது எப்படி எங்க கடவுள் மட்டும் வெறும் கல்லாகும். சரி அது எதோ உங்க மூளை அப்படி இருக்கு அதவிடுங்க. உருவழிபாடு பற்றி சுவாமி விவேகானந்தர் அருமையான தகவலை தருகிறார் அதை பார்ப்போம்..
'பிரதீகம்', 'பிரதிமா ' என்று இரண்டு சமஸ்கிரதச் சொற்கள் உள்ளன. பிரதீகம் என்றால் நோக்கி வருவது, நெருங்கி வருவது. எல்லா மதங்களிலுமே வழிபாட்டில் பல படிகளைப் பார்க்கிரீகள். இந்த நாட்டிலும் சிலர் மகான்களின் திருவுருவங்களை வழிபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட உருவங்களையும் சின்னங்களையும் வழிபடுகிறார்கள். வேறு சிலர் மனிதர்களைவிட உயர்ந்த ஆவிகளை வழிபடுகிறார்கள். ஆவிவழிபாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது. அத்தகையோர் இங்கே சுமார் என்பது லட்சம்(அப்போதைய கணக்கு) இருப்பதாக நான் படித்தேன். இன்னும் சற்று உயர்ந்த நிலையில் உள்ள தேவதைகளையும் தெய்வங்களையும் வழிபடுபவர்களும் உண்டு ......
இவையெல்லாம் பிரதீக வழிபாடு. இவர்கள் இறைவனை வழிபடவில்லை.ஆனால் இறைநிலைக்கு அருகில் உள்ளதான பிரதீகத்தை வழிபடுகிறார்கள். இவற்றின் வழியாக இறைவனை அடைய முயல்கிறார்கள்.
இந்த பிரதீக வழிபாடு நமக்கு முக்தி தந்து, நம்மைச் சுதந்திரர்கள் ஆக்காது. எந்தப் பொருட்களுக்காக அவற்றை வழிபடுகிறோமோ, அவற்றை மட்டுமே தரமுடியும். எடுத்துகாட்டாக, இறந்துபோன தன் முன்னோர்களையோ, நண்பர்களையோ ஒருவன் வழிபட்டால் ஒருவேளை சில சக்திகளோ, சில செய்திகளோ அவர்களிடமிருந்து கிடைக்ககூடும். வழிபடப்படுகின்ற அவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்பே வித்தை அதாவது விசேஷ ஞானம். ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமான முக்தி என்பது ஆண்டவனை வழிபடுவதன்மூலம் மட்டுமே கிடைக்க முடியும்.
வேதங்களை விளக்கும்போது சில கீழைநாட்டு அறிஞர்கள் சகுணக் கடவுளைக்கூட ஒரு பிரதீகமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. சகுணக் கடவுளைப் பிரதீகம் என்று கருத இடமுண்டு; ஆனால் பிரதீகம் என்பது சகுணக் கடவுளும் அல்ல, நிர்க்குணக் கடவுளும் அல்ல. அதை இறைவனாக வழிபடமுடியாது. எனவே தெய்வங்கள், முன்னோர்கள், மகான்கள், ஆவிகள் என்று பல்வேறு பிரதீகங்களை வழிபடுவதால் முக்தி பெறாலம் என்று நினைத்தால் அது பெரும் தவறாகும். மிஞ்சிப்போனால் அவர்களுடைய உதவியால் சில சக்திகளை பெறலாம். ஆனால் இறைவனால்தான் முக்தி தர முடியும். முக்தி தர இயலாதவை என்பதற்காக அவற்றை நாம் கண்டிக்க வேண்டியதில்லை. அந்த வழிபாடும் சில பலன்களைக் கொடுக்கவே செய்கிறது. இவற்றைவிட உயர்ந்த எதையும் அறிந்துகொள்ள இயலாத மனிதன் இந்த பிரதீக வழிபாட்டின்மூலம் சிறிது சக்தியைப் பெறலாம். சிறிது மகிழ்ச்சியை எய்தலாம். ஆனால் நீண்டநாள் அனுபவித்த பிறகு, முக்தி பெரும் தகுதி அவனுக்கு வரும்போது, அவன் தானாகவே இந்த பிரதீகங்களை விட்டுவிடுவான். இவ்வாறு சுவாமிஜி கூறுகிறார்.
ஹிந்துக்கள் வழிபாடும் போது அவர்கள் கல்லே மண்ணே என்று வழிபடுவதில்லை. அந்த உருவத்தை வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. நாளடைவில் அது அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது..

No comments:

Post a Comment