Thursday, July 31, 2014

•• இராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!!
••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம்.
••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம்.
••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது.
••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில்,
••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே."
--- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.
••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும்.
••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில்,
“கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி
கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே
நன்றே நேரான கோடு நிற்க திட்ட
மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப
முதலொரு பகலிலே யீரேழு யோசனை
பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது
ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ்
சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப்
பகரவே பின்னை காலக்கோடி நகரை
போயென பறையப் பாரு”
- என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும்.
••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர்.
••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க.
••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர்.
••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர்.
••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்.
••• ஆக ஒரு பாலம் கட்ட 1.Survey, 2. Planning, 3. Execution, 4. Post Completion ஆகிய நான்கு அத்தியாவசியமான விசயங்களைப் பின்பற்றி பாலத்தை அமைத்துள்ளனர்.
••• பாலத்தின் நீளம் நூறு யோசனை தூரம். அகலம் பத்து யோசனை தூரம். எனவே 1 : 10 என்ற விகிதத்தில் பாலம் அமைந்தது என்கிறது வான்மீகி இராமாயணமும், அகத்தியர் செய்யுளும்.
“இராமனுக்கே சூரனை வதமிக்க
சூத்திரமொன்றை யுபதேசித்தோ
முணர்வீர் - ஆதித்ய இருதயமென
உலகுணர உறைத் தொன்பது முறை அகச்
சுத்தியாய் ஏக காலவிரதத்தோடு முடிப்
பாருக்கு அல்லலேது”
என்கிறது பாடல்.
••• இராமபிரானுக்கு இராவணாசுரனை வதைத்திட, ஆதித்திய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்தவர் அகத்தியர் என்பதாம்.
••• யாரொருவன் விரதமிருந்து நம்பிக்கையுடன் தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்து வருகிறானோ அவன் அனைத்து சேமங்களையும் அடைகின்றான் என்று பொருள்.
••• பாலத்தின் சிறப்பை விமரிசிக்கின்றார் சித்தர். விருட்சம் என்றால் மரக்கட்டை என்று பொருள் கொள்க.
“மிதக்குங்கல்லை நீலனுடங் கூடிய
சாம்பவானுமேந்தி வானரத்தீய யடி நின்ற
கட்டை யது அசுவகருணமோடு யெல்லா
சாலை தாபப் புல் குதசா வர்சுனமொடு
வில்வமாவசோக மென யருவரி படுக்கை
மெத்த மாறு வரியோடு சதயோசனை
கொண்டே நிறுத்த வகுத்தனர் விசுவ
கர்ம நளரே”
••• .என்ற பாடல் வரிகளில் இருந்து, பாலத்தின் அடிப்பகுதியில், பருத்த மரக்கட்டைகளான எல்லா சாலை, அசுவகர்ணன் தாபா, மூங்கில், கூதஜா, அர்ஜுனா, வில்வம், மா மரம், அசோகா போன்ற கட்டைகள், நூல் பிடித்தாற்போல அடுக்கி வைக்கப்பட்டமை காணலாம். பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனமையால் அம்மரங்கள் இருகி தாவரக் கற்களாக மாறியமை ஆராய்ச்சியில் தெரிய வருகின்றது.
••• இருபது கிலோ, பதினெட்டு கிலோ நிறையுடைய கற்கள் நீரில் மிதப்பது இயற்கையின் தெய்வீகம். இன்றும் இராமேச்சுவரத்தில், சீதா தீர்த்தத்து அருகாமையில் இவை இருக்கின்றன. பக்தர்கள் காண அவை வைக்கப்பட்டுள்ளன.
••• இப்பாலம் இப்பூவுலகின் பொக்கிசம் என்கிறது நாடி. •••
•••இராவணாசுரனின் இறந்துபோன உடல் கல்பேழையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராவணாசுரன் கொல்லப்பட்டது உண்மை. கொன்றது இராமபிரான்.
••• பதப்படுத்தப்பட்டு ஒரு கல் பேழையில் வைக்கப்பட்ட இராவணாசுரனின் உடல் இலங்கையில் உள்ள “உஸ்ஸன் கொட’’
(Ussan guda) என்ற இடத்தில் கண்டறியப் பட்டிருக்கிறது.
••• தனுஷ்கோடியை பேய் நகரமென மக்கள் பேசும் காலம் வரும் என்ற அகத்தியர் வாக்கு முக்காலும் உண்மையே. தனுஷ்கோடியை Ghost City என்றே இன்றைய ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.
••• அகத்தியன் ஜீவநாடி வாக்கு பதிவுப்படி, முதல் நாளில் கடலில் பதினான்கு யோசனை தூரமும், இரண்டாம் நாளில் இருபது யோசனை தூரமும், மூன்றாம் நாளில் இருபத்தொரு யோசனை தூரமும், நான்காம் நாளில் இருபத்து இரண்டு யோசனை தூரமும், கடைசி நாளான ஐந்தாம் நாளில் இருபத்து மூன்று யோசனை தூரமும் பாலத்தை கட்டி முடித்தனர் வானர சேனைகள்.
••• இந்த பாலம் ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் அன்றைய கட்டிடகலை விஞ்ஞானம், இன்றைய நவீன விஞ்ஞானத்தை மிஞ்சுகின்றது என்பதில் ஏது சந்தேகம்.
‘இதிகாசம்’ என்ற சொல்லுக்கு இது இப்படி நடந்தது என்று பொருள் ஆகும். நாடியில் அகத்தியன்,
“சீதையின் பதி வாடிய வதனொடுத்தொடு
தர்பத்து உண்ணாது மலர்ந்தே
சாய்ந்திருக்க புல்லாணி பூமியில்
கண்டோமயர்ந்தோம் - அவதாரத்தானே
அவலமென அயர ஆகும் விதியை
யென் சொல்ல”
••• என்ற செய்யுள் மூலம் திருப்புல்லாணி என்ற ஊரில், தர்ப்ப புல்லை நிறையப் போட்டு படுக்கையை வானர சேனை தயார் செய்து தர, அதனில் மலர்ந்து - வானை நோக்கி, கவலை தோய்ந்த மனமும், முகமும் கொண்டு இராமர் படுத்திருந்தார் என்கின்ற செய்தியை அறிய முடிகிறது.
••• அவதாரம் என்றால் தேவர் என்ற நிலையில் இருந்து மனிதர் என்ற சற்று குறைந்த நிலையில், அறிந்தே- சத்யத்தின் நிலை நிறுத்தல் பொருட்டு தேவர்கள் வாழ்ந்தார்கள்.
••• அதன்படி அவதாரபுருசன் இராமன் என்பது விளங்குகிறது. இன்றும் திருப்புல்லாணியில் தர்ப்ப சயன பெருமாள் கோவில் உண்டு.
••• மேலும் இந்த இராமர் சேதுவின் அருகிலிருக்கும் பாறையில் பொக்கிசங்கள் புதைந்திருக்கின்றன என அமெரிக்க நிறுவனம் ழிகிஷிகி கூறியமை கவனிக்கத்தக்கது. அகத்தியர் தமது பாடலில்,
“ஊறுதருமொரி கொண்ட படிவந் தன்னால்
பக்குவமாய் மின்காந்தங் கண்டு
யளி காண சிலாங்கிய வளவு தூவி
நாளியில் கூட்ட வேதுவாமே
களவுஞ் செய யெண்ணுவார் கோடியே”
.என்ற வரிகள் நோக்கத்தக்கது. இங்கு தோரியம் என்ற அரிய வகை தாது படிவங்கள், ராமர் சேதுவின் அடியில் நிறைய கிடக்கின்றன.
•••இவற்றை உரிய முறையில் எடுத்து உபயோகித்தால், ஒவ்வொரு மணிநேரத்திலும் நான்கு லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதனை ழிகிஷிகி உள்ளிட்ட பற்பல பன்னாட்டு நிறுவனங்கள் அறியும்.
••• எனவே இராமர் பாலம் தெய்வீகமான பூமியின் புராதனச் சின்னமொடு விலைமதிப்பற்ற படிவபாறை சொத்துக்களை உள்ளடக்கியது என்பது திண்ணம்

No comments:

Post a Comment