Monday, July 21, 2014

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். 

* தெளிவான அறிவோடு இருக்க வேண்டும். 

* எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். 

* உணர்ச்சியை வென்றவனாக நடந்து கொள்ள வேண்டும். 

* எவரிடமும், எந்த விதத்திலும் பகைமை பாராட்டாதிருக்க வேண்டும். 

* எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும். 

* தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். 

* நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப– துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். 

* எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும். 

* ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும். 

* பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல், அவனுக்கு உதவ வேண்டும். மேற்கூறிய குணநலன்கள் இருந்து, ஈடுபாடுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ, அவனே உண்மையான பக்தன். இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன்.

No comments:

Post a Comment