Monday, September 15, 2014

முதியோர் இல்லங்களே இல்லாமல் போக, பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை கூறுங்கள்.

 முதியோர் இல்லங்களே இல்லாமல் போக, பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை கூறுங்கள்.
பிள்ளைகள் என்று மட்டும் பிரிக்காமல் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தான் நினைப்பது தான் சரி என்று எண்ணுவது முதல் தவறு. பிள்ளைகள் எண்ணத்திற்கு மதிப்பளிப்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். தலைமுறை இடைவெளியின் காரணமாக, பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று பெற்றோரும், வயதானதால் எதுவும் புரிய வில்லை என்று பெற்றோர் பற்றி பிள்ளைகளும் எண்ணுவதால் தான், ஒருவருக்கொருவர் மனக்கசப்பு உண்டாகிறது. மகனின் திருமணத்திற்குப் பிறகு, பேரப்பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும் பெற்றோர் மருமகளை முழுமையாக ஏற்பதில்லை. அதே போல, பிள்ளைகள் மனைவிக்காக பெற்றோரைப் புறக்கணிப்பதும் கூடாது. இரு பக்கமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோரும் பக்குவத்துடன் நடந்து கொண்டால் பிரச்னை தீரும்.

No comments:

Post a Comment