Monday, February 29, 2016

பணம் , வாழ்க்கை , நாளை

பணம்  , வாழ்க்கை , நாளை „heart“-Emoticon
வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது:
பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே தொலைக்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு பொல்லாத வளையம்.
நீ வாழ வேண்டுமென்றால் உனக்கு பணம் தேவை,பணம் வேண்டுமென்றால் பலதோடும் ஒத்துப்போக வேண்டியுள்ளது.
அதன் பிறகு வாழ்வதற்கு உன்னிடம் வாழ்க்கை இருக்காது.
பணம் இருக்கும் : வாழ்க்கை இருக்காது.
பிரச்சனை இவ்வளவு குழப்பமாக இருப்பதால், சில வருடங்கள் இந்த வேலையைச் செய்தபின்,ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓய்வாக நாம் நம் வழியை பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இதில் பல பிரச்சனைகள் உள்ளன....
முதலாவதாக, ஒருவன் தொடர்ந்து வாழ்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீ முப்பது, இருபது வருடங்கள் வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால்
அந்த தள்ளிப்போடும் தன்மையே உன் மனதின் பாகமாகி, உன் அமைப்பாகி விடும். நீ அதை கற்றுக்கொள்வாய்.
'ஓய்வுக்குப் பிறகு காட்டுக்குச் சென்று, நான் வாழ்வேன் ' என்று இருபது வருடங்கள் தள்ளிப்போட்டபின் தள்ளிப்போடுதல் ஒரு தன்மையாகிவிடும்.
"நாளை -நாளை -நாளை என்று முப்பதாண்டுகள் தள்ளியபின்,முப்பது வருடங்களுக்குப் பிறகு பென்சன் ஒருநாள் கிடைக்கும் : ஆனால் முப்பது வருடப் பழக்கமான 'நாளை 'யும் உன் கூடவே இருக்கும்."
திடீரென அதைவிட முடியாது. அது உன்னுடனே தங்கி இருக்கும்.
இப்போது நீ சிக்கிக் கொண்டாய்.
இதுவரைக்கும் ஒரு நம்பிக்கையாவது இருந்தது. இனி, அந்த நம்பிக்கைக்கும் வழியில்லை. இவ்வளவு நாளும் நாம் ஓய்வூதியம் பெற்று ஓய்வாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருந்தது.
பணப்பிரச்சனை தீர்ந்து விடும். சொந்த விஷயங்களை இனி செய்யலாம்.ஆடலாம்,பாடலாம் செய்ய விரும்பியதை எல்லாம் செய்யலாம்,ஏனெனில் இனி பணம் ஒரு பிரச்சனை இல்லை.
"ஆனால்,ஓய்வுக்குப் பிறகு, ஒருவன் வெறுமையையே உணர்வான். ஏனெனில்,அவனுக்கு,ஒரே மாதிரிதான் வாழத்தெரியும்...'நாளைக்கு வாழ்ந்து கொள்ளலாம் ' என்பதே அது"
ஓய்வு பெற்றவர்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். வேலையில் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். எந்த வேலையில் எப்போதும் துன்பத்துடன் இருந்தார்களோ அதே வேலையை தொடர்ந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்.
ஓய்வினால் வாழ்வில் பத்தாண்டுகள் குறைந்து விட்டது. தொண்ணூறு வருடம் வரை வாழவேண்டிய மனிதன் எண்பது வரைதான் வாழ்வான்.
"ஓய்வுபெற்ற மனிதனின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவுபோல ஆகிவிடுகிறது. யாருக்கும்,எதற்கும், அவன் தேவையற்றவன் ஆகிவிடுகிறான். அவன் அநேகமாக 'பயனற்ற' பொருள்களோடு எறியப்பட்டவனாகிறான்."
யார் கவலைப்படுகிறார்கள் அவனைப் பற்றி?
'நாம் பயனற்றவனாகி விட்டோம் ' என்று எண்ண ஆரம்பிக்கிறான்.
"இந்த எண்ணம் வந்த நாள் முதலே, நீ, தற்கொலை செய்துகொள்ள துவங்கிவிட்டாய் என்று அர்த்தம் "
இந்த எண்ணம் ஒரு விஷம்.
எனவே....
காலத்தை வீணாக்காதே.
பணம் ஒரு தேவை . அதுவே வாழ்வல்ல ..
இப்போதே ஆனந்த்தித்திரு நாளை அல்ல .
நாளை என்றுமே வருவது அல்ல . நாளை வந்தால் கூட
அதுவும் இன்றாகி விடும் . வாழ்க்கை இங்கு
இப்பொழுது மட்டுமே .
--- ஓஷோ ---

No comments:

Post a Comment