Sunday, January 30, 2011

இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
கண்ணீர் விடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்

No comments:

Post a Comment