Saturday, January 29, 2011

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் :

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் :
 பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.


தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்

2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)

3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)

4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி

5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு

6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்

7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,

14. கங்கா தீர்த்தம்,

15. யமுனை தீர்த்தம்,

16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்

18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்

19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி

20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்

21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்

22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை

No comments:

Post a Comment