Friday, January 28, 2011

ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள் சொல்கின்றன.

அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
1. அக்கரவிலக்கணம்

2. இலிகிதம்

3. கணிதம்

4. வேதம்

5. புராணம்

6. வியாகரணம்

7. நீதி சாஸ்திரம்

8. ஜோதிடம்

9. தர்ம சாஸ்திரம்

10. யோக சாஸ்திரம்

11. மந்திர சாஸ்திரம்

12. சகுன சாஸ்திரம்

13. சிற்ப சாஸ்திரம்

14. வைத்திய சாஸ்திரம்

15. உருவ சாஸ்திரம்

16. இதிகாசம்

17. காவியம்

18. அலங்காரம்

19. மதுர பாடனம்

20. நாடகம்

21. நிருத்தம்

22. சத்தப்பிரும்மம்

23. வீணை

24. வேணு (புல்லாங்குழல்)

25. மிருதங்கம் (மத்தளம்)

26. தாளம்

27. அத்திரப் பரிட்சை

28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)

29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)

30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)

31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)

32. இரத்தினப் பரிட்சை

33. பூமிப் பரிட்சை

34. சங்கிராம விலக்கணம்

35. மல்யுத்தம்

36. ஆகருடனம்

37. உச்சாடனம்

38. வித்து வேடனம் (ஏவல்)

39. மதன சாஸ்திரம்

40. மோகனம்

41. வசீகரணம்

42. இரசவாதம்

43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)

44. பைபீலவாதம் (மிருக பாஷை)

45. கவுத்துவ வாதம்

46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)

47. காருடம்

48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)

49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)

50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)

51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)

52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)

53. அதிரிசியம்

54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)

55. மகேந்திர ஜாலம்

56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)

57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)

58. வாயுஸ்தம்பம்

59. திட்டி ஸ்தம்பம்

60. வாக்கு ஸ்தம்பம்

61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)

62. கன்னத்தம்பம்

63. கட்கத்தம்பம்

64. அவத்தைப் பிரயோகம்



No comments:

Post a Comment