Saturday, June 25, 2011

கடவுளின் பிள்ளைகள்

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது <உங்கள் கடமையாகும்.
* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். அகிம்சை என்ற ஒரு நல்ல குணத்தை நாம் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் தாமாகவே நம்மை வந்தடையும்.
* அகந்தையை அடியோடு ஒழித்துவிடுங்கள். கோப உணர்ச்சி, பேராசை எண்ணங்கள் கிள்ளி எறியுங்கள். அப்போது தான் அகிம்சையை முழுமையாக உங்களால் பின்பற்ற முடியும்.
* பிறர் உங்களை இம்சை செய்தால் அவர்களைப் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்தை அறவே கைவிடுங்கள். அவர் மனம் திருந்தும் படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
* பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் வாக்சித்தி பெற்றுவிடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீகசக்தி பெற்றுவிடும்.
* நல்லொழுக்கம் என்பது வெட்கப்படக்கூடியதையோ, யாரும் விரும்பத்தகாத செயலையோ செய்ய அஞ்சுவதாகும். சமுதாயம் புகழும்படி நல்ல செயல்களை செய்ய முற்படுங்கள்.
* இரக்கம், வாய்மை, அன்பு, தூய்மை, தன்னடக்கம், தைரியம், பொறுமை, நேர்மை, பெருந்தன்மை, பக்தி, அமைதி, பகுத்தறிவு ஆகிய மேன்மையான குணங்களை பின்பற்றுபவர்களே கடவுளின் பிள்ளைகள் ஆவார்கள்.

No comments:

Post a Comment