Thursday, July 12, 2012

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது,'


மதுரையை ஆளும் கூன்பாண்டியன் சமணராக இருந்த சமயத்தில், சைவத்தின் பெருமையை நிலைநாட்ட மதுரை வரும்படி ராணி மங்கையர்க்கரசியார், தன் அமைச்சர் குலச்சிறையார் மூலம் அழைப்பு விடுத்தாள். அப்போது சம்பந்தரும், நாவுக்கரசரரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்தனர். அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற சம்பந்தர் மதுரை புறப்பட ஆயத்தமானார். நாவுக்கரசர் அவரிடம்,""இப்போது நாளும் கோளும் சரியில்லையே. சற்றுநேரம் கழித்து கிளம்பலாமே,'' என்றார். அதற்கு சம்பந்தர்,""நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது,'' என்ற சம்பந்தர் "வேயுறு தோளிபங்கன்' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment