Friday, July 13, 2012

இடது கண் துடித்தால் பலன் என்ன?

இடது கண் துடித்தால் பலன் என்ன? இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதை ராமாயணத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். சீதையை தேடிச்சென்ற போது சுக்ரீவனை சந்திக்கின்றான் ராமன். அப்போது ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். இந்த நட்புக்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, அக்னியை வலம் வந்தனர். அப்போது சுக்ரீவன், `ராமா, நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,' என்றான். ராமனும் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தார். அந்த சமயத்தில், வேறு வேறு இடத்தில் இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது என்பதை இது உணர்த்தியது. அடுத்து, வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. இதனால் ஆண்களுக்கு கெடுபலன் ஏற்படும். இதன்படி அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே தொடங்கி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். இதையே ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது

No comments:

Post a Comment