Wednesday, July 11, 2012

திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ஏன்

** திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா ஏன்?

மக்கள் நடமாடும் இடத்தில் திருஷ்டி கழித்த பொருட்களைப் போட்டிருந்தால் அதை மிதிப்பவர்களுக்குத் துன்பம் நேராது. யார் போட்டார்களோ அவர்களையே அந்தக் கஷ்டம் சேர்ந்து விடும். மக்கள் புழக்கம் இல்லாத இடத்தில் யார் கண்ணிலும் படாமல் திருஷ்டி கழித்துப் போட வேண்டும். இது தான் உண்மையாகவே திருஷ்டியைப் போக்கும். தெருவில் அறியாமல் மிதித்து விட்டால் கால்களைக் கழுவிவிட்டு திருநீறு பூசிக் கொண்டால் போதும்.

* கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
.
வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் "தான்' என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் "உலகின் உற்ற நண்பன்' என்ற பொருளில் "விஸ்வாமித்திரர்' என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்

* பரிகாரம் செய்தால் முன்வினைப் பாவம் தீருமா?

சுயநலம், ஆடம்பரம் இல்லாத பக்தி ஒன்று தான் பாவம் போக்கும் பரிகாரம்.

* இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் புரோகிதராகப் பணியாற்றுவதாக அறிந்தேன். இது சரிதானா?

வழிபாட்டுப் பழக்கவழக்கங்கள் தட்சிணாசாரம், வாமாசாரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தட்சிணாசாரம் என்பது தென்னிந்திய வழிபாட்டு முறை. வாமாசாரம் என்பது வடஇந்திய வழிபாட்டுமுறை. சைவ, வைணவ சமயங்கள் பெரிதும் வளர்ந்து நிற்கும் தென்னிந்திய வழிபாட்டு முறைகளில் பெண்கள் புரோகிதராகக் கூறப்படவில்லை. வாமாசார முறைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. சரியா தவறா என்று கூறும் நிலையில் நாடு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தேசாசாரம் (நாட்டு வழக்கம்) தலைதூக்கி நிற்கிறது. ஊரோடு ஒத்துப்போக வேண்டிய நிர்ப்பந்த நிலை இருக்கிறது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது.

* தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே?

இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை இப்படி எடுத்துக் கொள்வது வழக்கத்தில் வந்துவிட்டது. பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறீர்கள். அதுவே அழுகியிருந்தால் சகுனம் சரியில்லை என்று வருந்துகிறீர்கள். தேங்காயை ஸ்கேன் பரிசோதனை செய்து விடலாமா? இதை மூடவழக்கம் என்று தான் சொல்லவேண்டும்.

* கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
.
வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் "தான்' என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் "உலகின் உற்ற நண்பன்' என்ற பொருளில் "விஸ்வாமித்திரர்' என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்

No comments:

Post a Comment