Thursday, September 22, 2011

பக்தி கதை--மரம் நடுங்க மழை பெறுங்க

ஒரு நாட்டிற்கு, பக்கத்து நாட்டு அரசர் ஒருவர் விஜயம் செய்வதாக அறிவித்தார். பக்கத்து நாடு நட்பு நாடு என்பதாலும், அதிகமான நிதியுதவி செய்கிறது என்பதாலும் வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. மன்னர் அரண்மனைக்குள் நுழைய தேர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தேர் உள்ளே நுழையத் தடையாக, அரண்மனை வாசலில், நூறாண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்று தழைத்து நின்றது. அதன் விழுதுகள் ஆங்காங்கே ஊன்றி நின்றன. மரத்தை வெட்டினால் தான், தேர் தடையின்றி உள்ளே நுழையும் என அமைச்சர்கள் மன்னரிடம் சொன்னார்கள். மன்னர் மறுத்துவிட்டார். அமைச்சர்களே! மரத்தை வெட்ட வேண்டும் என்ற யோசனையை நிராகரிக்கிறேன். அதற்கு மாற்றாக கோட்டைச் சுவரின் ஒருபகுதியை இடியுங்கள்.
அங்கே வாசல் அமைக்கலாம். அதன் வழியே தேர் உள்ளே நுழையட்டும். நமது தேர்களும் கூட இனி அவ்வழியே வரட்டும், என்றான். கோட்டையை இடித்து வழி ஏற்படுத்த அதிக செலவாகும். மரத்தை நம் வேலையாட்களைக் கொண்டே வெட்டி விடலாமே! என்றனர் அமைச்சர்கள். அமைச்சர்களே! கோட்டை வாசல் கட்ட கல்லும், மணலுமே தேவை. அதை பத்தே நாளில் கட்டி விடலாம். அதற்கு செலவு அதிகமாகும் என்பது நிஜமே! அதை நாம் சம்பாதித்து விடலாம். ஆனால், ஒரு மரத்தை உருவாக்க நம்மால் முடியுமா! இயற்கையாகவே வளர்வது! அதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தெரியுமா? மேலும், இது பலருக்கு நிழல் தருகிறது. மழை பெய்யவும் மரங்கள் அவசியம், என்றான். அமைச்சர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கோட்டைச்சுவரை இடிக்கும் ஏற்பாட்டில் இறங்கிவிட்டனர். மரம் வளர்ப்பதின் அவசியம் புரிகிறதா!

No comments:

Post a Comment