Friday, September 16, 2011

** நாடி ஜோதிடம் உண்மைதானா? ஓலைச்சுவடியில் கூறிய பரிகாரத்தைச் செய்ய வேண்டுமா?

** நாடி ஜோதிடம் உண்மைதானா? ஓலைச்சுவடியில் கூறிய பரிகாரத்தைச் செய்ய வேண்டுமா?

உண்மைதான். ஆனால், சொல்பவர்கள் எல்லாருமே முறையாகப் படித்து ஜோதிடம் சொல்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான்.

*சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை ஏலத்தில் எடுக்கிறார்களே! அதை அணிவது சரியா?

சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment