Friday, September 16, 2011

* தெருவில் செல்லும் பொழுது செருப்பு அணிந்தபடியே பகவான் நாமங்களை சொல்லிக் கொண்டு செல்வது முறையா?

* தெருவில் செல்லும் பொழுது செருப்பு அணிந்தபடியே பகவான் நாமங்களை சொல்லிக் கொண்டு செல்வது முறையா?

செருப்பு அணிந்து செல்லும் பொழுது என்று குறிப்பிடும் பொழுது பகவான் நாம ஜபம் செய்வது என்பது முறையில்லை தான். இருப்பினும் எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே இருக்கிறோம் என்ற மேலான நிலையை அடைந்திருக்கும் பொழுது, இதுபோன்ற சிறு விஷயங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடியவைதான்.

* கேது திசை காலத்தில் கெடுபலன் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

விநாயகர் வழிபாடு உகந்தது. வியாழக் கிழமை விடியற் காலை விநாயகருக்கு தீபம் ஏற்றி அருகம்புல் அர்ச்சனை செய்து வாருங்கள். கொள்ளு தானியத்தில் சுண்டல் செய்து கேதுவுக்கு நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

No comments:

Post a Comment