Monday, April 22, 2013

சிவலிங்க தத்துவம்

சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது.இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம்.

சிவன் கோவில் திசைகளின் பலன்கள்.........

வடகிழக்கு பார்வை - வாதநோய் தீரும்
தெற்கு பார்வை - அகால மரணம் நீங்கும்.
மேற்கு பார்வை - திருமண தடை நீங்கும், பிரிந்த தம்பதிகள் சேரும்.வடமேற்கு - பொன்னும்,பொருளும் சேரும்
தென்மேற்கு - தெய்வீக அருள் உண்டாகும்
வடக்கு - வேலை வெற்றியடையும்.

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்யம்?

ஞாயிறு-சர்க்கரைப்பொங்கல்
திங்கள்-பால் (அ)தயிர் அன்னம்
செவ்வாய்-வெண்பொங்கல்
புதன்-கதம்பசாதம்
வியாழன்-சித்ரான்னம்
வெள்ளி-பால் பாயசம்
சனி-புளிசாதம்,

சிவபூஜைக்கு கத்தரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்கு பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம். 108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

No comments:

Post a Comment