Thursday, April 11, 2013

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

கோயிலின் கலசங்கள் மின்னலை தாங்கும் சக்தியுடையவை. ஆதி காலத்தில் வீடுகளில் மின்னலை எதிர்க்கும் சாதனங்கள் இல்லாத காரணத்தால் (earth) மழை காலங்களில் இடி மன்னலில் இருந்து பாதுகாக்க கோயில்களில் தங்குவது வழக்கம். இதன் காரணமாகத்தான் போலும் ""கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"" என நம் முன்னோர்கள் கூறினார்கள்.
கோயிலின் பிரதான வாசலாகிய கோபுர வாசலானது ஊடுருவிக்கதிர் ஆய்வுக் கருவி போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் கோபுர வாயிலினூடாக செல்லும் போது கண்ணுக்குப் புலப்படாத ஊடுருவிக் கதிரானது காந்த அலைகளாக நம் உடல் மீது செல்கின்றது. இதனால் தான் நாம் கோயிலுக்குள் நுழையுமுன்பாக கை கால்களை சுத்தம் செய்வது வழக்கம் போலும்| குதிக்கால்களை மேலிருந்து கழுதுவதால் ஏற்படும் விஞ்ஞான பூர்வமான காரணம் என்னவென்றால்ää குதிக்காலில் தான் நமது மூளையில் அமைந்துள்ள ""பிட்யூட்டரி"" சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கிய நரம்பு அமைந்துள்ளது.
நாம் உட்பிரகாரத்தில் செல்லும் பொழுது வேகத்தைக் குறைத்து நிதானமாக நடுவில் வைக்கப்பட்டிருக்கும் வாயில் படிகளை ஈரக்கால்களுடன் குனிந்து தொட்டுச் செல்லுதல் வேண்டும். அப்படிக் குனிந்து தொடும் பொழுது ஏற்கனவே கோபுரக் கலசங்களின் ஊடாகச் சேர்க்கப்பட்ட மின்கதிர்களின் முழுப்பயனையும் அடைய முடியும். நாம் அண்டசராசரத்துடன் இணைய வேண்டும் என்பதற்காகவே விஞ்ஞான பூர்வமாகவும் இந்து சமய வழிபாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment