Monday, April 22, 2013

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

1. வெள்ளை யானை, சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன-ஸ்ரீகாளஹஸ்தி இராகு, கேது கிரகங்கள்.

2. கண்ணப்பார் முக்தி அடைந்தார்-ஸ்ரீ காளஹஸ்தி.

3. மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார்-திருக்கடையூர்.

4. அம்பிகை வழிபட்ட தலம் - காஞ்சிபுரம்.

5. விநாயகர் வழிபட்ட தலம் - திருச்செங்கோடு.

6. முருகன் வழிபட்ட தலம் - திருமுருகன் பூண்டி.

7. திருமால் வழிபட்ட தலம் - திருவீழிமிழலை.

8. பிரம்மன் வழிபட்ட தலம் - சீர்காழி.9. இந்திரன் வழிபட்ட தலம் - மதுரை.

10. யானை வழிபட்ட தலம் - திருவானைக்காவல்.

11. எறும்பு வழிபட்ட தலம் - திருவெறும்பூர்.

12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம் - மயிலாப்பூர்.

ஊமத்தம் பூ பூஜை.........

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக்கடல் சிவபெருமான் ஆவார். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும். சித்தம் தெளியும்.

No comments:

Post a Comment